சத்தியம் மக்கள் சேவை மையம்

Thursday, March 29, 2007

சிங்கள வெறியர்களின் இனவெறியாட்டம்

சிங்கள வெறிநாய்களின் இனவெறியாட்டம்::
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி


 

Tamilwin.com சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.

மீன்பிடித் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பகுதி சிறிலங்கா கடல் எல்லைக்கு உட்பட்டது என்றும், இருப்பினும் எச்சரிக்கை வழங்காது துப்பாக்கிச் சூட்டினை சிறிலங்காப் படையினர் நடத்தியது தவறு என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவர் கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கன்னியாகுமரிப் பகுதியில் பதற்றம் நிலவுவதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சிங்கள கடற்படையினலின் கொடூரத் தாக்குதலில் இருந்து தமிழக மீனவரை காப்பாற்றத் தவறிய இந்திய கப்பற்படைக்கும், டில்லி ஏகாதிபத்தியத்திறகும் எமது கடுமையான கண்டனங்கள்...


--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:11 PM 0 comments

Tuesday, March 20, 2007

உதவ மவுஸ் போதுமே..


Donate for food daily


Hunger Fighters


Polish Hunger Site


Click for Home


Feed Kids in Argentina


Stop the hunger


The Hunger Site


Donate Food - Dutch


Poverty Fighters


Fight World Poverty (click geef gratis)


Donate for Homeless


Children in Need


Free Donation


Help Children - Brazil


Nourish the Needy


LifeSaver for Women


Stop violence against women


The Breast Cancer Site


Climb to End Breast Cancer


Fight Cancer


Child Health Site


Kid's Hospital In Mexico


Combat Addiction in Mexico


Give a minute


Educate females developing countries


Educate Developing Countries


Give Free Books Literacy Site


Brazilian Farm-School


Brazilian Charities


Funds donation


Support the Arts


Support Mexican Art


donate for arts


Charities in Mexico

Charities - German


Charity Cafe


Reduce Pollution


Donate for Air


Keep Pollutants out of Ocean


Donate SOLAR Energy


Plant Trees- Niagra


Plant an OAK Tree


Plant tree Brazil Rainforest


The Rainforest Site


Save Rain Forest


Save Land


Conserve Bird habitat


FOREST WATCH


Click for the Forest


Animal Recue site


Protect wildlife habitat


Feed Animals


Pets in Need


Save Chimps


SAVE BABY SEALS


Save the Big Cats


Save Wolves


Protect Wolf Habitat

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 5:17 AM 0 comments

உதவ மவுஸ் போதும்

வணக்கம் தோழர்களே....

தங்கள் ஒரு கிளிக் மூலம் பலருக்கு நாம் இணையதளத்திலேயே உதவ முடியும்.. இத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை சொடுக்குவதன் மூலம் அதை செய்யலாம்.

எப்படி இது சாத்தியம் ?
நீங்கள் சொடுக்கும் ஒவ்வொரு நாளும் அதன் பார்வையாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப விளம்பரதாரர்கள் வழங்கும் நிதியைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ முடியம். இதனை பல்வேறு வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்கின்றன. இப்பணியில் சத்தியம் மக்கள் சேவை மையம் தன்னை இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறது.

நண்பர்களே உதவிடுங்கள்
இப்பணியில் தம்மையும் இணைத்திட விரும்பும் நண்பர்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள சோர்ஸ் கோட்டை தங்கள் இணையதளம் மற்றும் பிளாக்கில் சமர்பித்து இத்தளத்தை பரப்பும் பணியில் ஈடுபடுங்கள்.
இது பணம் சம்பாதிக்கும் நோக்கமின்ற செயல்படும் சேவை தளமே ஆகும். இதன் மூலம் சத்தியம் மக்கள் சேவை மையம் யாதொரு நிதியும் பெறாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

தோழமையுடன்
க.அருணபாரதி
தலைவர், சத்தியம் மக்கள் சேவை மையம்.



About Sathiyam..
Sathiyam Makkal Sevai Maiyam is an Youth association of Puducherry Youths started by Mr.D.Sathiyamoorthy and Mr.K.Arunabharathi in 2003. This is a registered society with reference no:596/2003. This association involves in works related to Poverty, Hunger and other problems faced by the society by young talented youths. This Page contains sites of Non Governmenatal Organizations which helps in promoting the poors of the World.

How does the website work?
When you enter the websites, you are invited to click on the ‘donate’ button. This is completely FREE to the user, however a simple click means that sponsors will donate some amounts of money in loan credit to those in need. Every day, by simply clicking on this button and entering the site you can make a difference for someone in need.

What happens when I click on the "Donate" button? Does the donation cost me anything?
There is absolutely no charge to you for the donation; it is fully paid for by the sponsors.
When you click on the "Donate" button, the computer adds your donation to the day's totals and shows you the banners of the companies sponsoring your donation.



Help needed friends
For those who really want to involve in this work can just promote this site and popularise it for increasing the counts of the below websites. You can copy and paste the following source code in your websites and blogs for this purpose.

This is a service oriented page and this does not involve in money transaction with Sathiyam Makkal Sevai Maiyam. The Corresponding Websites will own for this.

With thanks and regards,
K.ARUNABHARATHI
President, Sathiyam Makkal Sevai Maiyam


Cut and Paste the following sorce code in your site Source Code



இணையதளங்களை பக்கம் செல்க
ENTER WEBSITES PAGE


செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 4:23 AM 1 comments

Sunday, March 18, 2007

ஈழ மக்களுக்காக உதவி

பட்டினியில் வாடும் ஈழ மக்களுக்காக
உதவிய நல்லுணர்வு கொண்ட
தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி !

பேரன்பு கொண்ட தோழர்களுக்கு செவ்வணக்கம்.
ஈழ தேசத்தில் வாழும் நம்மின மக்கள் பட்டினியில் கிடப்பதை உணர்ந்து தாங்கள் அவர்களுக்காக உணவு மற்றும் மருந்து பொருட்களை சேகரிக்கமாறு சென்னையில் கூடிய தமிழீழ விடுதலை ஒருங்கிணைப்புக் குழு முடிவடுத்தது. அதன் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அது தொடர்பாக விடுத்த வேண்டுகோளை ஏற்று அப்பணியில் பல தமிழ்த் தேசிய அமைப்புகள் ஈடுபட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொருட்களை சேகரித்தனர். சத்தியம் மக்கள் சேவை மையம் தானும் அப்பணியில் ஈடுபட முடீவு செய்து பொருட்கள் திரட்டப்பட்டன. 
 
ரொக்கப் பணம்

1    திரு. வீ.ரவி-ரேவதிஇ குயவர்பாளையம்இ புதுச்சேரி. ரூ.200
2    திரு. அ.கலியமூர்த்தி-ராணிஇ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. ரூ.200
3    திரு. ந.மோகன்-செயலட்சுமிஇ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. ரூ.100
4    திரு. க.செ ந்தில்இ சக்தி நகர்இ புதுச்சேரி. ரூ.100
5    திரு. க.ராஜேஷ்;இ சக்தி நகர்இ புதுச்சேரி. ரூ.100
6    திரு. ஜி.லியோஇ மேத்தா நகர்;இ சென்னை. ரூ.200
7    திரு. கு.சீனுவாசன்இ சாரம்இ புதுச்சேரி. ரூ.100
8    திரு. ஆறுமுகம்-சசிகலாஇ டி.ஆர் நகர்இ புதுச்சேரி. ரூ.100
9    திரு. தி.திருநாவுக்கரசு-ரேவதிஇ எழில் நகர்இ புதுச்சேரி. ரூ.100
10   திரு. தி.சாந்தகுணம்-தனலட்சுமிஇ எழில் நகர்இ புதுச்சேரி. ரூ.25
11   திரு. ப.ராஜுஇ நெற்குன்றம்இ சென்னை. ரூ.50
12   திரு. தே.சந்தோஷ்இ கவிக்குயில் நகர்இ புதுச்சேரி. ரூ.50
13   திரு. தே.சத்தியமூர்த்திஇ கவிக்குயில் நகர்இ புதுச்சேரி. ரூ.50
14   திரு. தே.சரவணன்இ கவிக்குயில் நகர்இ புதுச்சேரி. ரூ.50
15   திரு. மூ.சங்கர்இ டி.ஆர் நகர்இ புதுச்சேரி. ரூ.50
16   திரு. பாலாஇ தென்றல் நகர்இ புதுச்சேரி. ரூ.50
17   திரு. வீ.ராஜு-சித்ராஇ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. ரூ.50
18   திரு. ச.கணேசன்-செல்விஇ குயவர்பாளையம்இ புதுச்சேரி. ரூ.50
19   திரு. சோமுஇ டி.ஆர்.நகர்இ புதுச்சேரி. ரூ.25
20   திரு. க.ஆனந்த்இ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. ரூ.100
21   திரு. க.சண்முகம்இ காமாட்சியம்மன் வீதிஇ புதுச்சேரி. ரூ.50
22   திரு. இம்மானுயல்இ நங்கநல்லூர்இ சென்னை. ரூ.500
23   திரு. ஜி.ராஜேஷ்இ நங்கநல்லூர்இ சென்னை. ரூ.50
24   திரு. பி.செந்தில்இ மேட்டுப்பாளையம்இ கோவை. ரூ.200
25   திரு. போகா சந்தோஷ்இ சின்மயா நகர்இ சென்னை. ரூ.100
26   திரு. சோழன்இ மேத்தா நகர்இ சென்னை. ரூ.100
27   திரு. கிருபாகரன்இ அண்ணா சாலைஇ புதுச்சேரி. ரூ.25
28   திரு. செல்வம்இ அண்ணா சாலைஇ புதுச்சேரி. ரூ.25

உணவுப் பொருட்கள்

29   திருமதி. ராணி-கலியமூர்த்திஇ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. 10 கிலோ அரிசி
30   திருமதி ராஜிஇ எழில் நகர்இ புதுச்சேரி. 4 கிலோ அரிசி
31   திருமதி. செயலட்சுமி மோகன் தாஸ்இ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. 3 கிலோ அரிசி

32   திரு. புஷ்பராஜ்இ வானவில் நகர்இ புதுச்சேரி. 5 கிலோ அரிசி
33   வேதபுரீஸ்வரர் வழிபாட்டு நற்பணி மன்றம்இ புதுசாரம்இ புதுச்சேரி. 2½ லிட்டர் எண்ணெய்
மருந்து பொருட்கள்
34   திரு. பார்த்திபன்இ முத்திரையர்பாளையம்இ புதுச்சேரி. 600 மாத்திரைகள்
எண் 
 

மொத்தம் - பொருள் அளவு

                                           ரொக்க பணம்                  ரூ. 2750 
                                           அரிசி                                  22 கிலோ
                                           எண்ணெய்                         2½ லிட்டர்
                                           மாத்திரைகள்                    600
 
(புகைப்படத்தில்:: இடமிருந்து வலம்- நிறுவனர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சந்தோஷ், செயற்குழு உறுப்பினர் மூ.சங்கர், தலைவர் க.அருணபாரதி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர்செல்வன், அய்யா பழ.நெடுமாறன்)

 மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் 4-03-2006 அன்று புதுச்சேரி பெரியார் திடலில் பொதுவுடைமைப் புரட்சியாளர் சிங்காரவேலர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழவின் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அய்யாவிடம் நமது மன்றத்தின் நிறுவனர் தே. சத்தியமூர்த்தி, தலைவர் க.அருணபாரதி, பொருளாளர் தே.சந்தோஸ், பாலா, சங்கர், ராமு உள்ளிட்ட தோழர்கள் கையளித்தனர். 
கையளிக்கப்பட்ட பொருட்கள் விரைவில் அவை சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின் மூலம் ஈழம் கொண்டு செல்லப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இப்பணியில் ஈடுபட்டோர்க்கு வாழ்த்துக்களையும், நம் தமிழ் மக்களுக்கான சேவை என்றும் தொடரவும் அன்புடன் வாழ்த்துகிறோம்..
 
நன்றி !!!. நன்றி !!!. நன்றி !!!.

தோழர் க.அருணபாரதி
தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்
 
மேலும் விபரங்களுக்கு பார்க்க: www.sathiyam.tk
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:49 PM 0 comments

ரயில் மறியல் செய்ய முயற்சி :: 105 மீனவர்கள்கைது

தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும்
இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து
ரயில் மறியல் செய்ய முயற்சி :: 105

புதுச்சேரி, மார்ச் 18: தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது.
அமைப்பாளர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் குப்புராசு, துணைப் பொதுச் செயலாளர் கோதண்டபாணி, செயலாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சிங்காரவேலர் சிலையிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை அமைப்பு செயலாளர் விசுவநாதன் துவக்கி வைத்தார்.
இவர்கள் கடலூர் சாலையில் ஏ.எப்.டி மில் அருகே பாய்மரத்துடன் கூடிய கட்டுமரத்தை ரயில் பாதையில் போட்டு மறியல் செய்தனர். மறியல் போராட்டத்தின் போது தமிழக மீனவர்களை கொலை செய்யும் இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்யக்கூடாது. கச்சத்தீவை மீட்க வேண்டும். உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் வீராம்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் காங்கேயன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், பெரியார் திக லோகு ஐயப்பன், செந்தமிழ் இயக்கம் தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, சத்தியம் மக்கள் சேவை மையம் தலைவர் க.அருணபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் காரண மாக 10.40க்கு வர வேண்டிய ரயில் புது வைக்கு தாமதாக வந்தது.

-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:03 PM 0 comments

Tuesday, March 13, 2007

புதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்

புதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்
க. முகிலன்*


இந்தியாவின் வறுமைக்கும் நோய்களுக்கும் கல்லாமைக்கும், சமுக - பொருளியல் எற்றத்
தாழ்வுகளுக்கும் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியே காரணம் என்று இந்தியத்
தேசியவாதிகள் 1947க்கும் முன் கூறி வந்தனர்.
சுதந்திர இந்தியாவில், சோசலிசவாதி என்று சொல்லப்பட்ட நேருவின் ஆட்சியில், ஒரு
சனநாயக அரசமைப்பில் அளிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் நமக்குத் தரப்படும்
என்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. அடுத்து
ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி ''மன்னர் மானிய ஒழிப்பு'' பெரிய தனியார் வங்கிகளை
நாட்டுடைமையாக்கல்'' என்ற திட்டங்களைச் செயல்படுத்தினர். ''வறுமையே வெளியேறு''
என்று முழங்கினார். நேரு 19 ஆண்டுகளும் இந்திரா காந்தி 17 ஆண்டுகளும் முடிசூடா
மன்னர்களாக ஆட்சி செய்தனர். ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம்
உண்டாகவில்லை.

நேருவின் பேரன் இராசிவ் காந்தி 1984இல் ஆட்சிப் பொறுப்பேற்றார். தன்னுடைய
அம்மாவைவிட பாட்டனை விட வேகமாகப் பேசினார். இந்தியா, அய்ரோப்பாவில் ஏற்பட்ட
தொழிற்புரட்சிக் காலத்தைத் தவறவிட்டு விட்டது. இப்போது தகவல் தொழிழ்நுட்ப
யுகம். இதை இந்தியா தவறவிடக் கூடாது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக
இருக்க வேண்டும் என்று கூறி மக்களிடையே புதிய நம்பிக்கையை ஊட்டினார்.
தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கின்ற புதிய பொருளாதாரக் கொள்கை
இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான வலிமையான அடித்தளம் அமைத்தவர் அவரே!

குப்பை மேட்டிலிருந்த ஒன்று கோபுரக் கலசமானதுபோல் 1991இல் இராசிவ்காந்தி
கொலையுண்டதால் நரசிம்மராவ் தலைமை அமைச்சரானார். உலக வங்கியிலும் பன்னாட்டு
நிதியத்திலும் பெரும் பதவிகள் வகித்த மன்மோகன் சிங் நிதியமைச்சரானார். இவர்கள்
இருவரும் உலகவங்கியும், பன்னாட்டு நிதியமும் அமெரிக்காவும் இடுகின்ற
கட்டளைகளைத் தலைமேல் ஏற்று இந்தியாவின் சந்தையை ஏகாதிபத்திய நாடுகளின்
பெருந்தொழில் வணிக நிதிக்குழுமங்களுக்கு முழுமையாகத் திறந்துவிட்டனர்.

1989 இல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு
அறைகூவலாகவும், உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும்
விளங்கிவந்த சோவியத் ஒன்றியம் 1990இல் வீழ்ந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.
இந்தப் பின்னணியில் உலக மயத்திற்கு மாற்று இல்லை என்ற பரப்புரை வளர்முக
நாடுகளின் மக்களிடையே ஊடகங்களாலும், படித்த- பணக்கார ஆளும் வர்க்க
அறிவாளிகளாலும் செய்யப்பட்டது.

அதோபார்! மரத்தின் உச்சியில், கிளையில் தேன் கூடு இருக்கிறது; அதற்கு நேர்
கீழகாக நின்று கொள்; தேன் சொட்டும் என்று சொல்வது போல் இருக்கிறது
ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள். இப்பிறவியில் வருணாசிரம் உனக்கு விதித்துள்ள
கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்று இந்து ஆதிக்க வாதிகள் உழைக்கும்
கீழ்ச்சாதி மக்களுக்குச் சொன்னதையே சற்று மாற்றிச் சொல்கிறார் இன்றைய
''சனநாயக'' அரசியல்வாதிகள்.

இற்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி (2007-2012) 8 விழுக்காட்டை
எட்டிவிட்டது. 11 ஆவது அய்ந்தாண்டு திட்டக்காலத்திற்குள் இது 10 விழுக்காடு
என்ற நிலையை எய்திவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தையின்
குறியீட்டு எண் 7000 என்ற நிலையிலிருந்து 15000 என்று உயர்ந்துள்ளது. இந்தியப்
பொருளாதாரம் உறுதிப் பாடான வளர்முக நிலையில் இருப்பதன் அடையாளம் இது.
வெளிநாட்டு மூலதனம் குவிதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணிக்
கையிருப்பு தேவைக்கு மேல் உள்ளது. மொத்த விற்பனை விலை உயர்வு என்பது 5
விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா அணு ஆயுத
வல்லரசாகிவிட்டது. 2020 இல் மாபெரும் வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்பன போன்ற
செய்திகள் நாள்தோறும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றால் ஏழை எளிய
மக்களாக இருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பயன் கிடைத்துள்ளது என்பதே
நம் கேள்வி!

வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி

புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டதாகக் கூறப்படும்
வளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது புதிய வேலைவாய்ப்பை
உருவாக்கவில்லை என்பதே கண்கூடான உண்மையாக இருக்கிறது. எனவே இது வேலைவாய்ப்பு
இல்லா வளர்ச்சி (Jobless Growth) என்று கூறப்படும் குற்றச் சாட்டை
உலகமயமாக்கலின் தீவிர ஆதரவாளர்களால் கூட மறுக்க முடியவில்லை. மேலும் இது
இருக்கின்ற வேலை வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்காவில்
கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது இலக்கத்திற்கு மேற்பட்டவர்கள் தம் வேலையை
இழந்துள்ளனர். அதிக மூலதனமும் உயர் தொழில் நுட்பமும் கொண்டதாக உற்பத்தி முறை
மாற்றப்படுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. பொருள்களின்
உற்பத்தி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு சேவைப்பிரிவு முதன்மை நிலையைப்
பெற்றுவிட்டது. இதனால் தொழிலாளர்களும், தொழிற்சங்க இயக்கமும் தன் செல்வாக்கை
இழந்து வருகின்றன.

மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரின் விழுக்காடு

1978 2000
பிரிட்டன் 39.1 25.5
அமெரிக்கா 31.1 22.9
சப்பான் 35.1 31.4
கொரியா 29.1 28.4
žனா 17.5 22.0
இந்தியா 13.0 16.0

1950-70 காலத்தில் மின்னணுவியல் தொழில்நுட்பம் முதன்மையானதாக இருந்தது.
அதன்பின், தகவல் தொழில்நுட்பமே (Information Technology-IT) உலகப்
பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் மேல்
தட்டினராக, பணம் படைத்தோராக உள்ளவர்களின் துய்ப்பிற்காக பொருள்கள் உற்பத்திச்
செய்யப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இரு சக்கர
வாகனங்கள், கார்கள், தொலைபேசி, கைபேசி கணிணி, மற்ற ஆடம்பரப்பொருள்கள் முதலானவை
உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி
செய்யப்படுகின்றன. உலகச் சந்தை முதல் நிலையில் உள்ள 200 பன்னாட்டு
நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. 200இல் 83 அமெரிக்காவின் பன்னாட்டு
நிறுவனங்கள்.

முதலாளிய உற்பத்தி முறையுடன் உருவான தொழிலாளர் வர்க்கம் 1800க்குப்பின்
தொடர்ந்து கடுமையாகப்போராடிப் பெற்ற 8மணிநேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை,
வேலை நிறுத்த உரிமை, நிலையான வேலை, குறிப்பிட்ட அளவு ஊதியம், ஊதிய உயர்வு,
போனசு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, வைப்பு நிதி முதலானவை புதிய பொருளாதாரக்
கொள்கையால் பறிக்கப்படுகின்றன. சேவைப்பிரிவுகளில் சங்கம் அமைக்கும் உரிமை
மறுக்கப்படுகின்றது. அரியானா மாநிலம் குர்கானில் உள்ள சப்பான் பன்னாட்டு
நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்கும்
தொழிற்சாலையில் 2005 சூலை மாதம் சங்கம் அமைக்க முயன்ற தொழிலாளர்களை அரியானா
காவல்துறை கடுமையாகத் தாக்கியது. தங்கள் சங்கத்தை ஹோண்டா நிர்வாகம் அங்கீகரிக்க
வேண்டும். வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்று
மட்டுமே தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். 63 தொழிலாளர்களின் மண்டை உடைந்தது.
400 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களின் மனைவியரும் அன்னையரும்
காவல் துறையுடன் மோதிடத் துணிந்து நின்றனர். இதைப் பற்றியெல்லாம் மய்ய அரசு
வருந்தவில்லை. சப்பான் நாட்டின் மோட்டார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள்
கிளர்ச்சி செய்தால் அந்நிய நாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வருவது தடைப்படுமே
என்று நாடாளுமன்றத்தில் தன் கவலையைத் தெரிவித்தது. தகவல் தொழில்
நுட்பத்துறையில் தொழிற்சங்கம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று
கூறுகிறார் மேற்கு வங்க முதுலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா!

100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை
வேலையிலிருந்து நீக்கவோ, கதவடைப்புச் செய்யவோ, தொழிற்சாலையை மூடவோ அரசின் முன்
அனுமதியைப்பெற வேண்டும் என்று தொழிற்தகராறு சட்டத்தில் உள்ள பிரிவை (V(b))
நீக்கிவிட மத்திய அரசு முயன்று வருகிறது. 100 தொழிலாளர்கள் என்ற வரம்பை 1000
தொழிலாளர்கள் என்று உயர்த்த வேண்டும் என்று 2001-02 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு
திட்டத்தை நாடாளுமன்றத்தின் முன்வைத்து ஆற்றிய உரையின் போது அன்றைய நிதி
அமைச்சர் யசுவன் சின்கா கூறினார். இப்படிச் செய்தால் 90 விழுக்காடு
தொழிற்சாலைகள் தொழிற்தகராறுச் சட்டத்திலிருந்து விடுபட்டுவிடும். 300
தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற் சாலைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. இது 60 விழுக்காடு தொழிற்சாலைகளுக்கு விலக்கு
அளித்துவிடும். தொழிற்சங்க இயக்கம் அடியோடு முடங்கிவிட்டது. மே நாள் ஊர்வலங்கள்
கூட நடத்தப்படுவதில்லை. மக்கள் திரள் போராட்டங்களில் முன்னிலை வகித்த நாட்டின்
சனநாயகக் கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய தொழிலாளர் இயக்கம் நலிந்து
கிடக்கிறது.

மய்ய அரசும், மாநில அரசும், நீதித்துறையும் தொழிற் சங்க இயக்கங்களை
ஒடுக்குகின்றன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது முதலமைச்சராக
இருந்த செயலலிதா ஒன்றரை இலக்கம் அரசு ஊழியர்களை ஒரே சமத்தில் பணியிலிருந்து
தூக்கி எறிந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலமைச்சரின் சனநாயக
உரிமைப் பறிப்புப் போக்கைக் கண்டிப்பதற்குப் பதிலாக வேலை நிறுத்தம் செய்த அரசு
ஊழியர்களைச் சாடியது.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் இன்று 15 வயது முதல் 59 வயதில் 40கோடி பேர்கள் உள்ளனர். இவர்கள்
உழைக்கும் வயதினர் (Work force) எனப்படுகின்றனர். 0-15 வயதில் 20 கோடிக்
குழந்தைகளும் சிறுவர்களும் உள்ளனர். இவ்விருபிரிவினரும் சேர்ந்து 60கோடி.
எனவேதான் உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன்
பேசப்படுகிறது. ஆனால் தற்போது அழைக்கும் வயதினராக இருப்பவர்களுக்கு
வேலைவாய்ப்பும் மற்ற அடிப்படை வாழ்க்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளனவா?
இளைஞர் பருவத்தை நெருங்கிக் கொண்டீருப்பவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும்
உறுதி செய்யப்படவுள்ளதா?

உழைக்கும் வயதினராக உள்ள 40கோடி மக்களுள் மய்ய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை
நிறுவனங்கள் மற்றும் தனியார்துறையில் அமைப்புசார் தொழிலாளர்களாக உள்ளவர்கள்
3கோடி பேர்கள் உள்ளனர். தனியார் துறைகளில் முறையாக மாத ஊதியம் பெறுகின்ற ஆனால்
அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருப்பவர்கள் 3கோடி. இந்த 6 கோடிப் பேர்களும்
அவர்களின் குடும்பங்களும் தரமான அடிப்படை வசதிகளைப் பெறும் நிலையில் உள்ளனர்.

சுயதொழில் செய்வோராக 20 கோடிப்பேர்களும் அன்றாடம் கூலி வேலைசெய்து பிழைப்போராக
14 கோடி மக்களும் இருக்கின்றனர். கூலி வேலை செய்வோராக இருப்பவர்களில் 95
விழுக்காட்டினர் பட்டியல் குலத்தினர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினரே
ஆவார். சுயதொழில் செய்வோருள் வெரும்பான்மையினர் சிறு விவசாயிகளாகவும்,
குத்தகைக்குப் பயிரிடுவோராகவும் சிறிய அளவில் தொழில்கள், வணிகம் செய்வோராகவும்
உள்ளனர். 40 கோடிப்பேர்களில், 4 கோடிப்பேர்கள் இந்திய அளவில் வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் வேலைக்காக 54 இலக்கம் பேர்
பதிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 70 இலக்கம் பேர் வேலைக்காகப் பதிவு
செய்துள்ளனர்.

வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றதும் 10ஆவது அய்ந்தாண்டு திட்டக் காலத்திற்குள் 5
கோடி வேலைகளைப் புதியதாக உருவாக்கி நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தையே
ஒழித்துவிடப் போவதாக அறிவித்தார். வேளாண்மை போன்ற அடிப்படைத் தொழிழ்களில்
92.6இலக்கம், தொழிற் துறைகளில் 145 இலக்கம், சேவைப்பிரிவுகளில் 252
இலக்கம்
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று விரிவானதோர் பெரிய நூலை வாஜ்பாய் அரசு
வெளியிட்டது. ஆனால் வேலையில்லாதார் எண்ணிக்கைதான் பெருகிவருகிறது.

புதியதாக உருவாகின்ற வேலைவாய்ப்பு என்பது பெரிய மூலதனத்துடன் பன்னாட்டு
நிறுவனங்களால், இந்தியப் பெருமுதலாளிகளால் தொடங்கப்படும் சேவைப்பிரிவுகளிலும்,
தானியங்கிவகைத் தொழிழ்களில் மட்டுமே உருவாகிறது. சில ஆயிரம் இடங்களுக்கான
வேலையாக மட்டும் இவை உள்ளன. செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் நோக்கியா, ஹ"ரோ
ஹோண்டா, மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சில நூறு கோடிகள் முதலீட்டில்
தொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தம் போடப்படும் காட்சிகள் ஊடகங்களில்
பெரிதாகக்காட்டப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் இந்தோனேசியாவின் சலீம் பெருங்குழுமம் ரூ.44,000 கோடிக்கு
முதலீடு செய்வதற்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனால் 30,000 பேர்களுக்கு வேலை
கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5கோடி முதலீடு செய்தால் ஒருவருக்கு
வேலை என்பது எவ்வளவு கொடிய நிலை! சலீம் குழுமம் என்ன தொழிலில் முதலீடு
செய்யப்போகிறது? தொழில்நுட்பப் பூங்கா, அறிவுப்பூங்க, (Knowledge park) பெரிய
வணிகவளாகம், உடல்நலப்பூங்கா (Health park) போன்றவைகளைத் தொடங்க மேற்கு வங்க
அரசு 5400 ஏக்கர் நிலத்தை அளிக்கிறது. இவற்றால் மேற்கு வங்கத்தில் உள்ள
வெகுமக்களுக்கு என்ன பயன்? கொல்கத்தாவில் உள்ள வெகுமக்களுக்கு என்ன பயன்?
கொல்கத்தாவில் உள்ள அரசுப் பொது மருத்துவ மனையில் மருத்துவம் செய்து கொள்ளக்
கொண்டு வரப்படும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன. பெரிய செய்தியாக
இது வெளிவருகிறது. சலீம் குழுமம் தொடங்கும் நட்சத்திர மருத்துவமனைகளில் ஏழை
எளிய மக்களின் குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் செய்யப்படுமா?

வேளாண்மை

அமெரிக்காவில் 1950இல் 60இலக்கம் வேளாண் பண்ணைகள் இருந்தன. இவற்றைச் சார்ந்து
25 விழுக்காடு மக்கள் இருந்தனர். இப்பண்ணைகள் தமக்குள் இணைந்து 2000இல் 20
இலக்கம் பணைகளாகி விட்டன. 2 விழுக்காடு மக்களே இவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.
அமெரிக்காவில் வேளாண்மை, வணிக வேளாண்மை (Agro-bussiness) யாகிவிட்டது. இந்திய
நாட்டிலும் வணிக வேளாண்மையை உருவாக்கிடவே பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச்
சேர்ந்து கொண்டு மாநில அரசுகள் அதற்கான செயலில் ஈடுபட்டு வருகின்றன. பன்னாட்டு
நிறுவனங்களை கார்க்கில், கான்டினன்டல் போன்றவை வணிக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளன.
உலக தானியச் சந்தையில் 3இல் 2 பங்கு இவ்விரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்
உள்ளது. பூச்சி மருந்துச் சந்தையில் 84% பத்து பன்னாட்டு நிறுவனங்களிடம்
உள்ளது. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு 2
விழுக்காடு மட்டுமே! ஆனால் சேவைப்பிரிவின் பங்கு 72%.

இதேபோல் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு பிரான்சில் 2%
செருமனியில் 1%, பிரிட்டனில் 2% இந்நாடுகளில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்வோர்
எண்ணிக்கை முறையே 6%, 3%, 3% (உலக வங்கி அறிக்கை 2000) ஆகும். ஆனால்
அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் ஓராண்டில் 360 மில்லியன் டாலர் (ரூ.
15,20,000 கோடி) வேளாண் மானியம் தரப்படுகிறது. தொழில் வளர்ச்சி பெற்ற
இந்நாடுகளின் வேளாண்மையின் உயர் விளைச்சல் அதிக அளவில் இடுபொருள்கள்
சார்ந்ததாகவும், முழுவரும் இயந்திரமயமானதாகவும் ஆகிவிட்டது. இடுபொருள்களான
விதை, உரங்கள், பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, இயந்திரங்கள் ஆகியவற்றைத்
தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே பெரும்பகுதி வேளாண் மானியம் போய்ச்
சேருகிறது.

இந்தியாவிலும் முதலாளிய உற்பத்தியில் தயாரிக்கப்படும் இடுபொருள்கள் சார்ந்ததாக
வேளாண்மை ஆக்கப்பட்டுவிட்டது. 1960களின் இறுதியில் தொடங்கப்பட்ட பசுமைப்பருட்சி
மூலம் மேலைநாட்டு வேளாண்மை முறைகள் இங்கே புகுத்தப்பட்டன. இதனால் புன்செய்
வேளாண்மை žர்குலைந்துவிட்டது. அந்தந்த பகுதிகளுக்குரிய, சூழலுக்கு ஏற்ற,
விதைகள் அழிந்து விட்டன. இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் நஞ்சால் நிலமும்,
நீரும் சுற்றுச் சூழலும் பாழ்பட்டுவிட்டன. இயந்திர மய வேளாண்மை வேளாண்
தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்தது. விளைச்சலில் பெரும் தேக்கம்
ஏற்பட்டுவிட்டது. 1998 முதல் 2003 காலத்தில் 1,10,000 விவசாயிகள் தற்கொலை
செய்து க�
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 4:05 AM 0 comments

Friday, March 9, 2007

சட்டம் மற்றும் மனித உரிமை மீறல்கள்

சட்டம் மற்றும் மனித உரிமை மீறல்கள்

 நமக்காக நாமே வகுத்தது தான் சட்டம். ஆனால் அச்சட்டம் இன்று எல்லோருக்ம் சமமாக இருக்கின்றதா? என்றால் இல்லை. ஏழைக்கு ஒரு விதமாகவும் பணக்காரர்களுக்கு ஒரு விதமாகவும் செயல்படும் நிலைமை வலுக்கிறது. இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் பலாம் அவர்களுக்கே பிடிவாரண்ட் வாங்க சில நூறு ருபாய்கள் தான் செலவாகும் என ஒரு பத்திரிக்கை நிருபித்தார். சட்டம் அதை படைத்தவர்களிடமே இருக்கிறது. சுhதாரண மக்களை அது சென்றடைவதில்லை. அதனை செயல்படுத்தி மக்களுக்கான சட்டம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதை நிலைநிறுத்த பிரச்சாரங்கள்  செய்வோம்.
 மனித உரிமை மீறல் என்பது நடைமுறை வாழ்வில் சகஜம் என்றானது போல் ஆங்காங்கே நடைபெறுவது மிகவும் கண்டனத்திற்குரியது. பள்ளிச் சிறுவனை அடிப்பதும், மனைவியை துன்புறுத்துவதும் மனித உரிமை மீறலே ஆகும். அவ்வாறு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து போராட அணி திரள வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது. ஏனெனில் மனித நேயம் மட்டுமே நமது மையத்தின் அடி நாதம்.
மரண தண்டனை என்பது மனிதனை தண்டிக்க செயல்படுத்துவது மட்டுமல்ல அவனை அத்தோடு அழிக்க செயல்படுத்தும் மிகக் கொடூரமான செயல். இந்திய அரசமைப்பு சட்டவதியில் உள்ள வாழ்வதற்கான உரிமையை அதே அரசு மரண தண்டனையின் மூலம் பறிக்கிறது. தன்னை சட்டத்தை தானே உடைப்பதற்கு மரண தண்டனை ஒர் உதாரணம்.
இந்திய தண்டனை சட்டத்தின் 194ஐ பிரிவு: பொய் சாட்சி காரணமாக மரணதண்டனை நிறைவேற்றபட்டு ஒருவர் இறக்கநேரிட்டு, பின்னர் அது பொய் சாட்சி என கண்டறிய பட்டால், அந்த பொய் சாட்சியை கூறியவருக்கும் மரண தண்டனை விதிக்கலாம். பொய் சாட்சியின் வழியாக ஒரு நிரபராதி தண்டிக்கப்படலாம் என சட்டமே தன் குறையை ஒத்துக் கொள்கிறது. இதற்கு மாறாக ஆயுள் தண்டனை கொடுத்திருந்தால் பின்னர் அந்த பொய்சாட்சி நிரூபிக்கப்பட்டவுடன் விடுதலை கிடைத்து நிரபராதி பிழைத்துக் கொண்டிருப்பார். இவ்வாறு மீள முடியாத இந்த மரணதண்டனையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சுpல கோடிகள் மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில் சுமார் 1400 பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருந்தார்கள். பின்னர் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதும் அவர்களுக்கு அத்தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் சுமார் நூற்று ஐந்து கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் சுமார் 1200 பேர் தான் மரண தண்டனைக் கைதிகளாக சாவை நோக்கி பயணித்தபடி இருக்கிறார்கள். குற்றங்கள் அதிகமான நாடுகளிலேயே மரணதண்டனை ஒழிக்கப்படுகையில் மரணதண்டனைக் குற்றங்கள் குறைவான நம் நாட்டில் அவற்றை ஏன் ஒழிக்கக்கூடாது ? அஹிம்சையால் சுதந்திரம் பெற்றதாய் சொல்லும் இந்திய துணைக் கண்டத்திற்கு ஹிம்சையின் கோர வடிவமான மரணதண்டனை தேவை தானா ?
தமிழர்கள் மனித நேயத்திற்கு பேர் போனவர்கள். எறும்புக்கு கூட கோலத்தின் வழியாக உணவூட்டி அதன் பசியாறுவதை கண்டு ரசித்த தமிழினம் நம்மினம். ஆப்படிப்ட்ட நம் தமிழ் இனம் மரணதண்டனையை முற்றாக ஒழிக்கக் குரல் கொடுக்கும். சத்தியம் மக்கள் சேவை மையம் அதற்கு என்றும் துணை நிற்கும்
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:13 PM 0 comments

பெரியாரியம்

பெரியாரியம்

'புதிய உலகின் தொலைநோக்காளர் : தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் : சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை : அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி' - இவற்றை திராவிடர் கழகத்து தொண்டர்களோ பெரியார் பற்றுள்ளவர்களோ சொல்லவில்லை. 1970 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சபையின் துணை அமைப்பான உலக கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு அவருக்கு விருது வழங்கிய போது இப்படித் தான் குறிப்பிட்டனர்.
பெரியார் கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன(பிராமண) எதிர்ப்பாளராகவுமே பல இடங்களில் நினைவு கொள்ளப் படுகிறார். ஆனால் அவரை ஆராய்ந்து பார்த்து சிந்திக்க விரும்புpனால் உண்மை விளங்கும்.
'பிறப்பிலேயே ஒரு மனிதன் தாழ்ந்தவனாக பிறப்பது தான் விதி. அவன் கல்விக் கற்கக் கூடாது. கோயிலுக்கு செல்ல கூடாது. மற்றவர்களுக்கு அடிமை சேவகம் மட்டுமே புரிய வேண்டும்.' என்று மனிதனை மனிதனே இழிவு படுத்தும் கொடுமையான பாதகமான மனுநீதியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்து மதத்தில் பலதரப்பட்ட மக்கள், 'கடவுளின் கட்டளை' என்ற போர்வையில் ஏமாற்றப்பட்டு பிறருக்கு(பார்ப்பனருக்கு) அடிமை சேவகம் புரிவதை கடுமையாக எதிர்த்து போர்க்குரல் எழுப்பியவர் தான் பெரியார். பார்ப்பனர்கள் மலத்தை மிதித்து விட்டால் காலை மட்டும் கழுவுக் கொணடு விட்டுக்குள் நுழைவர். ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனின் துணி தெரியாமல் அவர் மீது பட்டுவிட்டால் கூட அதனை தீட்டு என்று குளித்து விட்டுத் தான் வீட்டிற்குள் நுழைவார். இது போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களை கடைபிடித்ததை கடுமையாக சாடியவர் தான் பெரியார். இரண்டாயிரம் வருடங்களாக படிக்கக் கூடாது என கல்வி புறக்கணிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு கல்வி வேண்டும் என கூறி அவர்களுக்கு உதவும் வண்ணம் இடஒதுக்கீடு என்னும் நிவாரண முறையை கொண்டு வந்து சமூக நீதி நிலைநாட்ட வழிவகுத்தார். அவர் மறைந்த பின்னரும் அவரின் தாக்கம் இச்சமூகத்தின் மீது எப்படி படர்ந்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக் காட்டு ஆங்காங்கே நடைபெறும் பெரியார் சிலை உடைப்புகள். அவரது சிலையை பார்த்தால் கூட பொறுக்க முடியாத அளவிற்கு அவரது பகுத்தறிவு பிரச்சாரம் பார்ப்பனிய இந்துத்வ வெறியர்களுக்கு வெறுப்பூட்டியிருக்கிறது.
பார்ப்பனிய சக்திகளின் வருகைக்கு முன்னர் தமிழ்ச் சமுதாயத்தில் சாதி என்பது தொழிலை அடிப்படையாகக் கொண்ட ஓர் பிரிவு தான். தமிழர்கள் அதனை வைத்து ஒருநாளும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டதில்லை. அவரவர் தம் தொழிலை செய்து கொண்டு அமைதியாக யாரையும் அடிமைப்படுத்தாது வாழ்ந்து வந்தனர். ஆனால் பின்னர் வந்த வந்தேறிகளான ஆரிய அயோக்கிய கும்பல் புராண இதிகாசங்கள் போன்ற கேட்கக் கூசும் ஆபாசக் கதைகளை அள்ளிவிட்டு பிறப்பின் அடிப்படையில் சாதி பிறப்பதாக புதிய ஏமாற்றுக் கதையையும் சொல்லி, பக்தியின் பெயரால் மிரட்டி அதை நம்ப வைத்து, ஆதித் தமிழர்களை தரம் தாழ்த்தி ஊருக்கு வெளியே குடிசைகளில் குடியமர்த்தி, அவர்தம் வீட்டு மகளிரை மட்டும் கோயில்களில் தங்கவைத்து 'இறைசேவை' என்ற பெயரால் விபசாரம் செய்வித்து அவர்களின் வாழ்வை நாசமாக்கி, அவர்தம் பிள்ளைகள் கல்விக் கற்க தடை செய்து மகா கொடுமைகளையும் அயோக்கிய தனங்களையும் கொஞ்சமும் வெட்கங்கொள்ளாமல் மதத்தின் பெயராலும் இறைவனின் பெயராலும் புகுத்தி வந்த பார்ப்பனர்களைத் தான் கண்டித்தார் பெரியார். அவர்களுக்கு மக்கள் சேவகம் புரிவது மதத்தின் பெயரில் உள்ள பயத்தின் மீது தான். அதனால் தான் மதநம்பிக்கையையே சாடினார் பெரியார்.
நாம் பெரியாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது பகுத்தறிவு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய கொள்கைகளை மட்டுமே. மதத்தின் பெயரால் நடக்கும் மூடத்தனங்கள் சாதிக் கொடுமைகள், மதக்கலவரங்கள் இவற்றை எதிர்த்து நாம் குரல் கொடுத்து போராட வேண்டும். நமது கொள்கை நாத்திகக் கொள்கையுமல்ல. மத ஒழிப்பு கொள்கையுமல்ல. மற்றவர்களுக்கு துன்பமோ இழிவோ ஏற்படுத்தாமல் மக்கள் அவரவர் தம் மதங்களை தெய்வங்களை வழிபட உரிமை உண்டு. நாம் அதை பறிக்கவோ தடுக்கவோக் கூடாது. ஆனால் அதன் பெயரால் மற்றவர்களுக்கு தீமையோ இழிவோ ஏற்படாத வண்ணம் மத சுதந்திரம் வரம்புக்குள் அடங்கியிருக்க வேண்டியது அவசியமாகும்.
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:12 PM 0 comments

பொதுவுடைமைக் கொள்கை ஏற்பு

பொதுவுடைமைக் கொள்கை ஏற்பு

ஜெர்மன் தத்துவ அறிஞரும் இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளராக உலகமே அடையாளங்காட்டும் காரல் மார்க்ஸ் அவர்கள் வகுத்த பொதுவுடைமைக் கொள்கை புதிய உலகை படைக்கும் சக்தி கொண்டது. எண்ணற்ற உழைக்கும் மக்களை, விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகள் தம் முன்னோர் சொத்து என்ற பெயராலும் மூலதனம் என்ற பெயராலும் தொழில் நடத்தி மக்களின் உழைப்பை சுரண்டி தான் மட்டும் சுகமாக வாழ்வதை எதிர்த்த மார்க்ஸ், படைத்த ஒப்பற்ற தத்துவமே மார்க்சியம். முதலாளித்துவத்திற்கு தீர்வாக நிகரமை(சோஷலிசம்) மற்றும் பொதுவுடைமை தத்துவம்(கம்யுனிசம்) ஆகியவற்றை முன்னிறுத்தினார். அளவுக்கு மீறிய தேவைக்கு அதிகமான சொத்துக்களைக் கொண்ட பணக்காரர்களிடமிருந்து அதனை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி அதனை ஏழைகளுக்கு சம அளவல் பங்கிட்டு வழங்கும் பாட்டாளிகள் அங்கம் வகக்கும் அரசை நிறுவுவதின் மூலம் இதனை செயல்படுத்த தத்துவம் இயற்றினார் மார்க்ஸ். அதனை நடைமுறைப்படுத்தி உலகின் முதல் நிகரமை அரசை அமைத்த புரட்சியாளர் மாமேதை லெனின் ஆவார். அவருக்கு பின் வந்த ஸ்டாலின் உள்ளிட்ட பிற தலைவர்கள் அப்பணியை தொடர்ந்து வந்தும் கூட சோவியத் யூனியன் எனப்பட்ட பொதுவுடைமைப் பூங்காவை அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ சக்திகள் திட்டமிட்டு தகர்த்தன. இருந்தாலும் கியூபா, சீனா, கொரியா, வெனின்சுவேலா, உள்ளிட்ட பல நாடுகள் புரட்சியின் மூலம் கம்யுனிஸ அரசை நிறுவியுள்ளதை கவனிக்கவும். 'மனிதனுக்கு மனிதன் சமம்' என்னும் நிகரமைக் கொள்கையையும் 'அனைத்து பொருட்களும் மக்களுக்கே' என்கிற கம்யூனிஸ தத்துவத்தையம் நாம் ஏற்கிறோம். அதற்காக போராடிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ், சேகுவோரா, மாவோ, லெனின் உள்ளிட்ட தலைவர்களின் வழிகாட்டுதல்களின் படியும் மண்ணுக்கேற்ற புதிய மார்க்சிய தத்துவத்தை வரையறுப்பதின் மூலமும் புதிய நிகரமை சமூகத்தின் எழுச்சியை உருவாக்க முயல வேண்டும
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:11 PM 0 comments

உலகமய எதிர்ப்பு

உலகமய எதிர்ப்பு

உலகத்தையே இன்று அச்சுறுத்தி வரும் கொள்கை 'உலகமயம்'. இந்த கொள்கையானது ஒரு நாட்டின் பொருளாதாராத்தை பிற நாட்டு நிறுவனங்களும் வேட்டையாட அனுமதிப்பதுடன் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவதிலும் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவதிலும் கவனம் செலுத்துகின்றது. எடுத்துக்காட்டு: இந்திய துணைக் கண்டத்தின் மொத்த குளிர்பான சந்தை சுமார் 6500 கோடி. அதில் நமது உள்@ர் காளிமார்க் கோடா, மாப்பிள்ளை வினாயகன் சோடா, கோலி சோடா உள்ளிட்ட பொருட்களும் அடங்கும். அதை குடிசைத் தொழிலாகவும் பலதரப்பட்ட மக்கள் செய்து வந்தனர். 1993 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட உலகமய பொருளாதாரக் கொள்கையால் பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வந்தன. ஏற்கனவே கொழுத்த லாபம் சம்பாதித்து வந்த அந்நிறுவனங்கள் இங்கிருந்த சிறு நிறுவனங்களை விளம்பர உத்திகள் மூலம் அழித்தன. பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது இந்திய குளிர்பான சந்தை மொத்தமும் அவர்களிடம் தான். நம் மண்ணின் நீரை உறிஞ்சி அதில் நச்சு மருந்து இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் வேதிப்பொருட்கள் மேலும் பல கலந்து விஷமாக்கி அதை நம்மிடமே குடிக்க சொல்லுகின்றன அந்நிறுவனங்கள். அக்குளிர்பானங்கள் பிறந்த இடமான அமெரிக்காவின் பல இடங்களில் அது தடைசெய்யப்பட்ட பொருள் என்பது கவனத்துக்குரியது. இருந்தாலும் இந்தியா அதனை தடைசெய்யாமல் அமெரிக்காவுக்கு பயந்து அதை அப்படியே விட்டுவிட்டன. அதை போல எல்லாத் துறைகளிலும் இருந்த ஏழை இந்திய தமிழக நிறுவனங்களை அடித்து விரட்டிவிட்டு பன்னாட்டு பணக்கார நிறுவனங்கள் புகுந்து மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றோம். இந்நிலைமையை மீட்க மீண்டும் ஒரு சுதேசிப் போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது.  இனி நாம் வாங்கும் பொருட்கள் யாருடையது என்று பார்த்து வாங்க வேண்டும். எங்கோ இருக்கும் பணக்காரன் வாழ்வதை விட இங்கிருக்கும் ஏழைகள் வாழ்வது சிறந்ததல்லவா ?
சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்க முயலவேண்டும். அதனை மக்களிடம் பரப்பி பன்னாட்டு நிறுவனங்களை மண்ணை விட்டு விரட்டி மண்ணின் மைந்தர்களிடமே பொருளாதாரத்தை நிறுவ வேண்டும். அதற்கு தீர்வு பொருளாதாரத்திற்கான சிறந்த கொள்கையான பொதுவுடைமைக் கொள்கையே யாகும்.:
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:11 PM 0 comments

தமிழ்த் தேசியம்

தமிழ்த் தேசியம்
'கல் தோன்றி மண் தோன்ற காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி
எம் தமிழ் குடி'.

இவை வெறும் வார்த்தை மட்டுமல்ல நம் முன்னோர் நம் இனத்தின் பெருமையை உணர்த்த விட்டுச் சென்ற அடையாளம்.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிறந்து வளர்ச்சியடைந்து இலக்கிய வளம் மிகுந்து திகழ்ந்து இன்றும் அதனை இழக்காமல் சிறந்து விளங்கும் செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை நாம் சொல்லித் தான் விளங்க வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இருந்த போதும் நாம் அதனை மறந்து தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்ற நமக்கே உரிய பண்புகளை மறந்து விட்டு 'இந்தியன்' என சொல்லிக் கொள்வது எதனாலே என ஆராய்வது அவசியம்.
 நாம் இந்தியர் தான். இந்தியத் துணைக் கண்டத்தில் வசிப்பதினால் மட்டுமே நாம் இந்தியர்களாக இருக்கிறோம். நாம் தமிழ் மொழி பேசுகிறோம். தமிழ் பண்பாட்டை கடைப்பிடிக்கிறோம். ஆனால் நாம் தமிழர் என சொல்லிக் கொள்வதில்லை. நமக்கு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாது என்றாலும் நாம்  இந்தியன் என்றே சொல்லிக் கொள்கிறோம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமே நாம் இந்தியக் குடிமக்களே தவிர இந்தியர்கள் அல்ல எனக் கூறுகிறது. ஏனெனில் இந்தியர்; என்கிற இனம் ஒரு போதும் இருந்ததில்லை என்பது தெளிவான உண்மை.
 ஒரு தேசிய இனம் என்பது இயற்கையாகவே வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தை குறிப்பதாகும். ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே பொருளியல் ஆகிய அம்சங்களை கொண்டது தான் ஒர் இனமாகும். இதன்படி பார்த்தால் தமிழர், மலையாளி, கன்னடர்;, தெலுங்கர்;, சீனர், மங்கோலியர், மராட்டியர் போன்றவை தேசிய இனங்களாகும். ஆனால் இவற்றில் எந்த வகையிலும் இந்தியா சேராது. ஏனெனில் இந்தியா என்பது பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டமாகும்.
 ஆங்கிலேயர் நம் தமிழ் மண்ணையும் மற்ற தேசிய இனங்களின் தாயகங்களையும் தனித் தனியே அடிமைபடுத்தி வந்தனர். அவர்களிடமிருந்து போராட அனைத்து தேசிய இனங்களும் சேர்ந்து பேராடின. முடிவில் அவர்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்ற பெயரில், ஆதிக்கக்காரர்களான இந்திக்காரர்களிடமும், பார்ப்பன பனியா சேட்டுகளிடமும் சுதந்திரத்தை தாரைவார்த்து விட்டு சென்றுவிட்டனர். அதை சாதகமாக்கிக் கொண்ட இந்தி, பார்ப்பன, பனியா ஆதிக்கக்காரர்கள் மத்திய அரசு என்கிற பெயரில் மாநில தேசிய இன மக்களை அடிமைகளாக்கி அவர்களை சுரண்டி வாழ்வதை அரசியலின் மூலம் சட்டமாக்கினார், அதை உடைத்து மாநில அரசுகளுக்கு தன்னுரிமை கேட்டு போராடும் அமைப்புகளுக்கு மத்திய அரசு 'தீவிரவாதம்' மற்றும் 'பயங்கரவாதம்' என்ற பெயரில் முத்திரை குத்தி அவர்களை அடக்கி ஒடுக்குகின்றனர்.
தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட பல அமைப்புகள் சரித்திரத்தையே மாற்றி அமைத்திருக்கின்றன என்பது வரலாறு நமக்கு சொல்லித் தரும் பாடம். இதற்கு சமீபத்திய உதாரணம்: நேபாள மாவோயிஸ்ட்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அது தீவிரவாத இயக்கம். ஆனால், இன்று நேபாள அரசின் அச்சாணியாக இருப்பது அந்த அமைப்பு தான். அதற்கு யார் தீவிரவாத பட்டத்தை சூட்டியது? அதை ஒடுக்க நினைத்த அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க சக்திகள் தான்…
 வன்முறையை நாம் ஒரு போதும் போராட்ட முறையாக நாடவில்லை. அதை தீர்மானிப்பவர்கள் அடக்க நினைக்கும் ஆதிக்க சக்திகள் தான். சீன புரட்சி மேதை மாவோ சொல்வார் 'எமது ஆயுதங்களை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்'.
 வெறும் 200 வருடங்களாக இருக்கும் 'இந்தியன்' என்கிற போலி அடையாள சொல்லுக்கு தரும் மரியாதையை இனி 5000 வருடங்களாக வரலாற்றில் நிலைத்து நிற்கும் 'தமிழன்' என்கிற நம் உண்மையான அடையாளத்திற்கு கொடுப்போம். இந்தியா என்று பேசிக் கொண்டு இங்கு கோலோச்சி வாழ்ந்து வரும் சேட்டு உள்ளிட்ட வடநாட்டவர்கள் இனியும் நம்மை சுரண்டி வாழக்கூடாது. நம் புதுச்சேரியின் புதல்வர் புரட்சிக்கவிஞர்pன் வரிகளான 'அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க' என்கிற முழக்கத்தை செயல்படுத்த முனைவோம். ஆக இந்தியர் என்று இனியும் பேசி நம் மாநில தன்னரிமை எனப்படும் சுயநிர்ணய உரிமைகளை இழக்க வேண்டாம். ஆகவே நாம் தமிழர் என்கிற அடையாளத்தை நிலைநிறுத்துவதிலும் தமிழை பகைவர்களிடமிருந்து பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்தி பேராட வேண்டும்.
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:10 PM 0 comments

Monday, March 5, 2007

நீங்களும் இணையலாம்

சுயநலம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட யாவரும் எம்முடன் இணைந்து செயலாற்றலாம்...

புதுச்சேரியில் வாழ்பவர்கள் நேரிலும் வெளியூரில் வாழ்பவர்கள் உணர்வாலும் இணையத்தாலும் செயலாற்றலாம்...

தொடர்புக்கு

தோழர் மூ.சத்தியமூர்த்தி,
நிறுவனர், சத்தியம் மக்கள் சேவை மையம்,
37, 6வது குறுக்குத் தெரு,
கவிக்குயில் நகர்,
புதுசாரம்,புதுச்சேரி.
பேசி: 9843768828

தோழர் க.அருணபாரதி,
தலைவர், சத்தியம் மக்க்ள் சேவை மையம்,
145, அரவிந்தர் வீதி,
புதுச்சேரி-1.
பேசி: 9841949462.

தோழர் தே.சரவணன், அவைத்தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்,
40, ஒத்தவாடை வீதி,
புதுசாரம், புதுச்சேரி.

இணையம் :www.sathiyam.tk
மின்னஞ்சல் :arunabharthi@gmail.com
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:44 PM 0 comments

செயல்பாடுகள்

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பேபி சாராஸ் ஹோம் என்கிற குழந்தைகள் மனநல காப்பகத்தில் அங்கிருக்கும் சிறார்களுக்கு முக்கிய தினங்களன்று உணவளித்து வருகிறோம்.

கடந்த நவம்பர் மாதம் அங்கிருக்கும் சிறார்களுக்கு உடை, அலமாரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்ட்டன. மையத்தின் மகளிர் பிரிவு தலைவி சசிகலா ஆறுமுகம் அவர்கள் இவ்வுதவியை வழங்கினார்.

கோடைவிடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச ஒருநாள் ஓவியப் பயிற்சியும் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஓம் சக்தி சேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

நமது மையத்தின் இணையதளம் ஓம்சக்தி சேகர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் அருணபாரதி இயற்றிய மையத்தின் கொள்கை விளக்க புத்தகமும் வெளியிடப் பட்டது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலின் போது புதுச்சேரி தேர்தல் துறையினரின் அனுமதியுடன் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. அதன் பலனாய் வரலாறு காணாத வகையில் சுமார் 86 சதவீத வாக்குள் புதுச்சேரியில் பதிவாயின.

இதய நோயினால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புதுச்சேரி-சித்தன் குளத்தை சேர்ந்த இளைஞர் அன்பு அவர்களுக்கு நம் மையத்தின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டன. சென்னையில் இருந்த நமது மையத்தின் தலைவர் க.அருணபாரதி அவர்கள் பல தொண்டு நிறுவனங்களுக்கு அன்புவின் தயாருடன் சென்று உதவிகோரினார். நமது சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் ரூ.2500 உதவித் தொகையாக அளிக்கப்பட்டது.

ஈழத்தில் பட்டினியில் வாடும் நம் தமிழ் மக்களுக்காக உணவு மற்றும் மருந்து பொருட்கள் திரட்டும்படி மாவீரர் பழ.நெடுமாறன் அவர்கள் விடுத்த வேண்டுகோளின் படி சத்தியம் மக்கள் சேவை மையம் பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது. ரூ.2750, 22 கிலோ அரிசி, 3 லிட்டர் எண்ணெய், 600 மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கபட்டன. 4-3-2007 அன்று மாலை பெரியார் திடலில் நடந்த பொதுவுடைமை புரட்சியாளர் சிங்காலவேலர் பிறந்தநாள் விழாவில் அவை திரு.பழ.நெடுமாறன் அய்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிறுவனர் சத்தியமூர்த்தி, தலைவர் அருணபாரதி, பொருளாளர் சந்தோஷ், ராமு, சங்கர் மற்றும் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:24 PM 0 comments

தொடர்புக்கு...

தொடர்புக்கு

தோழர் மூ.சத்தியமூர்த்தி,
நிறுவனர், சத்தியம் மக்கள் சேவை மையம்,
37, 6வது குறுக்குத் தெரு,
கவிக்குயில் நகர்,
புதுசாரம்,புதுச்சேரி.
பேசி: 9843768828

தோழர் க.அருணபாரதி,
தலைவர், சத்தியம் மக்க்ள் சேவை மையம்,
145, அரவிந்தர் வீதி,
புதுச்சேரி-1.
பேசி: 9841949462.

தோழர் தே.சரவணன், அவைத்தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்,
40, ஒத்தவாடை வீதி,
புதுசாரம், புதுச்சேரி.

இணையம் :www.sathiyam.tk
மினக்னஞ்சல் :arunabharthi@gmail.com
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:20 PM 0 comments

தொடங்கப்பட்டதன் வரலாறு

புதுச்சேரியின் வளரும் இளைஞர்களாகிய நாங்கள் வளர்ந்து வரும் பிற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கவும்இ இச் சமூகத்திற்கு ஏதேனும் நல்ல விடயங்கள் செய்வோமே என்ற ஆவலுடனும் கட்டமைக்கப்பட்டது தான் சத்தியம் மக்கள் சேவை மையம்.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி புதுச்சேரி அரசின் மாநில பதிவுத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு இம்மையம் தொடங்கப்பட்டது. அதன் நிறுவனர் தோழர் மூ.சத்தியமூர்த்தி. ஸ்ரீ வேதபுரீஸ்வரர் வழிபாட்டு நற்பணி மன்றம் என்கிற ஆன்மீக நற்பணி மன்றத்தில் இணைந்து பல ஆன்மீக சேவைகள் செய்து வந்தவர். புதுவை பூரான்கள் இயக்கத்தின் காசுக்கடைக் கிளையிலும் இருந்தவர்.

அதன் தலைவராய் க.அருணபாரதி பொறுப்பேற்றார். மேல்நிலைப்படிப்பின் போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் பங்கேற்றவர். புதுவை பூரான்கள் இயக்கத்தின் கலவைக் கல்லூரி கிளையின் தலைவராய் பணியாற்றியவர். பின் காசுக்கடைக் கிளைத் தலைவராகி பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அதன் செயலாளராக சீனு என்கிற சீனுவாசன் அவர்களும் பொறுப்பேற்றார். அதன் மற்ற நிர்வாகிகளாய் க.ஆனந்த், சந்தோஷ், சண்முகம், ஷங்கர் ஆகியோரும் பொறுப்பேற்றனர். அதன் அவைத்தலைவராக திரு.தே.சரவணன் அவர்கள் நியமிக்கபட்;டார். திரு தே.சரவணன் அவர்கள் சாரம் பகுதியில் பல ஆன்மிக மற்றும் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

ஆரம்பிக்கப்பட்டது முதல் பல பொது நல காரியங்களில் ஈடுபட்ட நமது சத்தியம் மக்கள் சேவை மையம், வெறும் பொது நலகாரரியங்களில் மட்டும் ஈடுபடாமல் வரும் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கொள்கை வழிமுறைகளைக் கடைபிடித்து மக்களுக்கான அரசியல் போராட்டங்களில் ஈடுபடவும் மக்களுக்கான இயக்கமாக ஒர் போராட்ட அரசியல் களத்தைக் காணவும் முடிவெடுத்துள்ளது. இது ஓட்டு, தேர்தல், அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கான போராட்டங்களை மட்டும் நடத்தும் போராட்ட அரசியல் வழிமுறையாகும். சத்தியம் மக்கள் சேவை மையம் மக்களின் பேராதரவுடன் மக்களுக்காக மக்களுடனே வலம் வரும் என நம்புகிறோம்.

-------------------------------------------------------------------------------------












செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 8:54 PM 0 comments

Sunday, March 4, 2007

புதுவையில் மரங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது

புதுவையில் மரங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது
மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தல்

புதுச்சேரி, மார்ச்.5-

புதுவையில் மரங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்பு

ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக அந்த இடத்தில் 10மரக்கன்றுகளை நடவேண்டும் என சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம். வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில் இத்தீர்ப்பு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

மரங்கள் வெட்டப்படுவதுதான் போதிய மழை இல்லாமல் போனதற்கு காரணம். மேலும் ரசாயன தொழிற்சாலைகளாலும், நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததாலும் நிலத்தடி நீர் மாசுபடுதல் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

மரங்களை வெட்டக்கூடாது

இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஐகோர்ட்டு வழங்கியுள்ள இத்தீர்ப்பு நகலை பெற்று அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பிவைக்கவேண்டும். புதுச்சேரியில் மரங்கள் நிறைய வெட்டப்படுவதால் இத்தீர்ப்பை செயல்படுத்துவது சுற்றுச்சூழலை ஓரளவாவது பாதுகாக்க உதவும்.

இந்த தீர்ப்பை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டக்கூடாது. தவிர்க்கவே முடியாத சூழலில்தான் மரங்கள் வெட்டப்படவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வோடு அரசு செயல்படவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சுகுமாரன் கூறியுள்ளார்.
 
Source:http://www.dailythanthi.com/article.asp?NewsID=320051&disdate=3/5/2007&advt=2
 
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 8:42 PM 0 comments

ஈழத்தமிழர்களுக்கு நிதி வழங்கல்

வணக்கம் தோழர்களே...

பொதுவுடைமை புரட்சியாளர் மா.சிங்காரவேலர் பிறந்த நாளை முன்னிட்டு
05-03-3007, ஞாயிறு அன்று புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பாக ரூ.2750
நிதியையும் உணவுப் பொட்களையும்
பட்டினியில் வாடும் ஈழ மக்களுக்காக
திரு.பழ.நெடுமாறன் அய்யாவிடம் கையளிக்கபட்டது.

நிகழ்ச்சியில் சத்தியம் மக்கள் சேவை மையம் நிறுவனர் சத்தியமூர்த்தி, தலைவர் அருணபாரதி, பொருளாளர் சந்தோஷ், மற்றும் தோழர்கள் ராமு, சங்கர், பாலா ஆகியோர் சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பாக கலந்து கொண்டனர்.
 
மேலும் பலர் ஈழத்தமிழர்களுக்காக நிதி, உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கினர்.
 
வழங்கப்பட்ட பொருட்களை அனைத்தும் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பிடம் அளிக்கபட்டு ஈழம் கொண்டு செல்லப்படும் என திரு.பழ.நெடுமாறன் அவர்கள் அறிவித்தார்.
 
நாள் : 05-03-3007
இடம் :புதுச்சேரி

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 8:32 PM 0 comments

Thursday, March 1, 2007

உதவிட வேண்டுகிறேன்..

தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்...

ஈழ தேசத்தில் பட்டினியில் வாடும்
நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு
உதவிட அன்புட கேட்டுக் கொள்கிறேன்...

 
அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பணம் அளித்து உதவலாம்...

பொருட்கள் அனைத்தும் புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையத்தின் சார்பாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறனிடம் 4.03.2007 அன்று புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்..

அதன் பின் அவையனைத்தும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் ஆழத்திற்கு கொண்டு சேர்க்கப்படும்...

தொடர்புக்கு ::
க.அருணபாரதி, தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்,
145, அரவிந்தர் வீதி,புதுச்சேரி..

சென்னை அன்பர்கள் இவ்வெண்ணை தொடர்பு கொண்டு
வெள்ளி மாலை 7 மணிக்குள் என்னை சந்தித்து வழங்கலாம்..
கைப்பேசி : 9841949462

இப்பணி நம்மின சகோதரர்களின் பட்டினியை
போக்க மனித நேயத்துடன் நடைபெறுவதாகும்..
இதில் எந்த மறைமுக உள்நோக்கமும் இல்லை..
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:02 PM 0 comments