சத்தியம் மக்கள் சேவை மையம்

Tuesday, November 6, 2007

பிரிசேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கக் கவிதை

புறநானூற்று வீரத்தை
எழுத்துக்களாகவே  
பார்த்த நமக்கு
"இது தான் அது"வென
இடிததுரைத்தது
புலிகள் இயக்கம்..
 
தமிழனின் சீற்றத்தால்
சிதறி ஓடிய சிங்களம்
தனக்கே உரிய
கோழைத்தனத்தை
கொலை செய்து
காட்டிவிட்டது...
 
சமாதானத்தின் மீது
நாளும் நம்பிக்கை
வைத்து
பேச்சினை நம்பியவரின்
மூச்சையே நிறுத்திவிட்டது..
 
மாறா புன்னகையுடனும்
மாசற்ற மனதுடனும்
வீரனாய் வாழ்ந்த
நம் செல்வனை
இழந்து விட்டோம்..
 
ஆறாக் காயங்களை
தாங்கிநிற்கும் மண்ணில்
வேறாய் ஓடுகின்ற
லட்சிய வேட்கைக்கு
வீரனே உம்மை
உரமிட்டோம்..
 
கண்களில் நீர்ததும்ப
கனல்களால் நெஞ்சம்
வெதும்ப,
உன்முகம் லட்சியத்தை
அடைந்திட சொல்கிறது..
 
"இந்தி்"யத் தமிழனாக
ஏதும் செய்திட இயலாமல் 
நிற்கும எம்மை,
வெட்கம் கொல்கிறது..
 
எத்தனை
துயர் வந்தாலும்
எத்ததனை
தடை வந்தாலும்
அத்தனையும் உடைந்திட
தமிழ்ஈழம் 
நிச்சயம் எழும்..
 
பித்தனை போலவே
பிறழ்ந்து திரியும்
அரசியல்வாதிகளின்
போலி முகங்களில்
முத்திரை பதிக்கும்
அடி விழும்..
 
மரணத்தை எண்ணி
மனம் நோவதைவிட
இனம் காக்க எழுந்தால்,
வரலாறு நம்மை
வரவேற்கும்..
 
நிச்சயமாய் பிறக்க போகும்
ஈழத்தின் வாசலிலே
தமிழ்ச்செல்வனின்
புன்னகையும்
அன்போடு அதை
அலங்கரிக்கும்..
 
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு
எங்கள் வீரவணக்கம் !
 
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:24 PM

0 Comments:

Post a Comment

<< Home