சத்தியம் மக்கள் சேவை மையம்

Friday, August 31, 2007

தோழருக்கு செவ்வணக்கம்...(தனி மடல்)

தோழருக்கு செவ்வணக்கம்...
 
        பொதுவுடைமைக் கொள்கையை லட்சியமாக ஏற்றுக் கொண்ட மொழிக்கும், இனத்திற்கும் பாடுபட்டு என்றும் எளிமையுடன் வாழ்ந்து மறைந்தவர் அமரர் ஜீவானந்தம் ஆவார். ஆரம்பத்தில் கதரியக்கத்தில் தேசத் தொண்டு புரிந்து விட்டு பிறகு பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இனவிடுதலைக்காக பாடுபட்டு, பின்னர் வர்க்க பேதங்களை அகற்ற பொதுவுடைமைக் கொள்கைகளை ஏற்று செயல்பட்டு வந்தவர் ஜீவா. தமிழ் இலக்கியங்கள் மீதும் தமிழ் மீதும் அவர் கொண்ட பற்று அவரை தமிழ்த் தேசியர்களுக்கு ஒரு பாடம்.
        தமிழக அரசியலில் வள்ளல்களாக போஸ் கொடுத்துக் கொண்டும் மக்களை ஏமாற்றி பிழைத்து கொள்ளும் பல தலைவர்கள் அறியப்ட்டது போல ஜீவானந்தம் அறியப்படவில்லை.  இன்றைய இளைய தலைமுறைகளுக்கு அமரர் ஜீவானந்தம் சிறந்த வழிகாட்டி. அவரை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதை நமது கடமையெனக் கருதுவது சிறப்பு..
       
    அமரர் ஜீவானந்தம் அவர்களின் நூற்றாண்டு விழாவினை தமிழ்க் கலை இலக்கிய பேரவை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளது. அதற்கு தங்களால் முடிந்த நன்கொடை உதவிகளை தந்து உதவ வேண்டுகிறேன்..
 
நிகழ்ச்சி நிரல்
 
வரவேற்புரை
தோழர் அ.பத்மநாபன்
வெளியீட்டாளர், தமிழர் கண்ணோட்டம்
 
தலைமை
தோழர் உதயன்
தமிழக ஒருங்கிணைப்பாளர்,தக.இ.பே
 
சிறப்புரை 
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன்
 
பாலவர் இரா.இளங்குமரனார்
 
திரு.மா.சே.தெய்வநாயகம்
 
தோழர் பெ.மணியரசன்
ஆசிரியர், தமிழர் கண்ணோட்டம்
 
நன்றியுரை 
தோழர் கவிபாஸ்கர்
 
நேரம்
செப்டம்பர் 22 மாலை 5.30 மணிக்கு
இடம்:
செ.தெ.நாயகம் பள்ளி, தியாராய நகா, சென்னை-17.
 
தொடர்புக்கு
தோழர் க.அருணபாரதி,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை,
20-7, முத்துரங்கம் சாலை,
தியாகராய நகர்,
சென்னை-17.
பேச: 9841949462
 

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 5:50 AM

0 Comments:

Post a Comment

<< Home