சத்தியம் மக்கள் சேவை மையம்

Friday, April 30, 2010

மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்

மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு

இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு

சென்னை, 17. 29.04.2010.


தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.

 

இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

 

முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.

 

முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவு+ர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.

  

சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் திரு. ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ம.செந்தமிழன், சிறப்புரையாற்றுகிறார்.

 

சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பு+தலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது.

 

மாலையில், 'முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்' என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

 

முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

 

சிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

 நன்றி!

தோழமையுடன்,

க.அருணபாரதி 

| ஒருங்கிணைப்பாளர் |  இளந்தமிழர் இயக்கம் |

| பேச: 91 9841 949462 |

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 12:02 AM 28 comments

Friday, July 3, 2009

தமிழ்த் தேசியம் சிறப்பு மாநாடு(12.07.09) அழைப்பிதழ்

திருச்சியில் 12.06.09 அன்று "தமிழ்த்தேசியம்" சிறப்பு மாநாடு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அழைப்பு

 

3.07.09, சென்னை-17.

 

"தமிழ்த் தேசியம்" என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றை, வருகிற 12.07.09(ஞாயிறு) அன்று திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தவிருக்கிறது.

 

ஈழத்தில் சிங்கள - இந்திய இராணுவங்கள் கூட்டாக நடத்திய தமிழ் இன அழிப்புப் போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கெதிராக போரை நிறுத்துமாறும் சிங்கள இராணுவத்திற்கு செய்து வரும் படை உதவிகளை நிறுத்துமாறும் இந்திய அரசை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் ஆறரை கோடித் தமிழர்களும் போராட்டங்களில் ஈடுபட்டும் இந்தியா ஏன் அசையவில்லை என்ற கேள்வியை எழுப்பியும், இந்தியா தமிழினத்திற்கு எதிரான நாடு என்பதை விளக்கியும் இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் சான்றோர்கள் உரை, இசை நிகழ்ச்சி, நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

 

திருச்சி நடுவண் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் நிலை எதிரில் ஓட்டல் அரிஸ்டோ எல்.கே.எஸ்.மாகலில் 12.07.09 அன்று காலை 9 மணியளவில் இம்மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடக்கின்றது.

 

இசை நிகழ்ச்சி

 

மாநாட்டு அரங்கிற்கு, ஈழத்தமிழர்க்காக தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாரின் நினைவில் "ஈகி முத்துக்குமார் அரங்கம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. காலை 9 மணியளவில் சமர்ப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்குகின்றன. இதனை தோழர் இரெ.சு.மணி அவர்களால் தொடங்கி வைக்கிறார்.

 

ஓவியக் காட்சி - புகைப்படக் காட்சி

 

பின்னர், தணிக்கை அறிஞர் மு.குமரசாமி அவர்களால் ஓவியக்காட்சி மற்றும் புகைப்படக் காட்சிகள் தொடங்கி வைக்கப்படுகின்றன. தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் நா.இராசாரகுநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகின்றார்.

 

"தமிழ்த் தேசிய அரங்கு" - கருத்தரங்கம்

பின்னர் தமிழ்நாட்டு தமிழர்களின் பிரச்சினைகள் குறித்த கருத்தரங்கம் நடக்கின்றது. இதற்கு "தமிழ்த் தேசிய அரங்கு" என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் கருத்தரங்கிற்குத் தலைமை தாங்குகின்றார். "தமிழர் இழந்த நில - நீர் உரிமைகள்" என்ற தலைப்பில் முனைவர் த.செயராமன் அவர்களும், "மொழிக் கொள்கை" என்ற தலைப்பில் முனைவர் கு.அரசேந்திரன் அவர்களும், "தமிழ்த்தேசியமும் உலகமயமும்" என்ற தலைப்பில் தோழர் ம.செந்தமிழன் அவர்களும் உரையாற்றுகின்றனர்.

 

கருப்புக்குரல் - கலை நிகழ்வு

பிற்பகல் 1.30 மணியளவில் தமிழீழத் திரைப்பட உதவி இயக்குநர்கள் அமைப்பு நடத்தும் கருப்புக்குரல் கலை நிகழ்வு நடக்கிறது. இதனை ஓவியர் புகழேந்தி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

 

பாவீச்சு

பின்னர், கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கம் நடக்கிறது. இந்நிகழ்வை "திருக்குறள்" முருகானந்தம் அவர்கள் தொடங்கி வைக்கிறார். இப்பாவீச்சில், பாவலர்கள் தமிழேந்தி, கவித்துவன், கவிபாஸ்கர், முழுநிலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.

 

"தமிழீழ அரங்கு" - கருத்தரங்கம்

தமிழீழப் பிரச்சினை குறித்த கருத்தரங்கிற்கு "இப்படிக்கு" இதழின் ஆசிரியர் வீ.ந.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்குகிறார். இக்கருத்தரங்கில், "ஈழமும் உலகநாடுகளும்" என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் தோழர் கண.குறிஞ்சி அவர்களும், "இந்தியமும் ஈழமும்" என்ற தலைப்பில் வழக்கறிஞர் த.பானுமதி அவர்களும், "ஈழத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் தோழர் க.அருணபாரதி அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.

 

படத்திறப்பு

அண்மையில் காலமான புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களது திருவுருவப்படத் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. புதுச்சேரி செந்தமிழர் இயக்க அமைப்பாளர் தோழர் ந.மு.தமிழ்மணி அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்குகின்றார். குடந்தைத் தமிழ்க் கழகத்தின் அமைப்பாளர் தோழர் சா.பேகன் அவர்கள் படத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்துகின்றார்.

 

கலை நிகழ்ச்சி

பின்னர், அரியமங்கலம் இலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்வை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

 

கொடி எரிப்பில் சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு

மாநாட்டுத் தீர்மானங்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு அவர்கள் படிக்கிறார். அதன் பின்னர் ஈழத்தில் தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள இந்திய - சிங்கள கூட்டுப் படையினரைக் கண்டித்து இந்திய இலங்கைக் கொடிகளை எரித்து சிறைக்கு சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்களுக்கும் பாராட்டு விழா நடக்கிறது. மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி அவர்கள் தோழர்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி சிறப்பிக்கிறார்.

 

நிறைவரங்கம்

மாலை 6 மணியளவில் நடக்கும் நிறைவரங்கத்திற்கு பாவலர் பரணர் அவர்கள் தலைமை தாங்குகின்றார். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, இயக்குநர் மணிவண்ணன், எழுத்தாளர் அமரந்தா, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் மதுரை அருணா, அனைத்து மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் தோழர் ஈரோடு இராம்குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

 

மாநாட்டின் நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றுகிறார். தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி நவில்கிறார்.

 

மாநாட்டிற்கு உதவிகள் செய்வது, தங்குமிட வசதிகள் மற்றும் மாநாட்டு ஏற்பாடுகுள் குறித்த அனைத்து விதமான தொடர்புகளுக்கும் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாநகரத் தலைவர் தோழர் கவித்துவன் அவர்களை 9791883533 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.










--
Posted By தமிழ்த் தேசியன் to தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி at 7/03/2009 09:54:00 AM
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 11:31 AM 0 comments

Sunday, February 15, 2009

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏!

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏!






ஈழத்தமிழர்களை தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவி வரும் தமிழின துரோக காங்கிரசைக் கண்டித்து புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் நேற்று(15-02-2009) நடந்தது.ஈழத்தில் சிங்கள அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போரை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டியும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கிய ஆள், ஆயத, பண உதவிகளை திரும்பப் பெற வேண்டுமென்றும்,

 தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முதன்மைப் படுத்தி புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் புதுச்சேரி சாரம் பகுதியில் உண்ணாப்போராட்டம் நடந்தது.


 
இப்போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்" இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்கினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் அவைத்தலைவர் தே.சரவணன் உண்ணாப்போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் தலைவர் தே.சத்தியமூர்த்தி, பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மையத்தின் துணைச் செயலாளர் க.ஆனந்த் 'இந்திய அரசின் தமிழினத் துரோகம்' என்ற தலைப்பில் கண்டன உரையாற்றினார்.


 
ராஜபட்சேவின் அரக்கத்தனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது படத்தின் முன் செருப்புகளை விட்டு "மரியாதை" செய்யப்பட்டது. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து மாண்ட தூத்துக்குடி இளைஞர் முத்துக்குமாரின் மரண சாசனத்தை சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் படித்தார். ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


 
இப்போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணி இரா.சுகுமாரன், புதுச்சேரி மாநில மிதிவண்டி வியாபாரிகள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் டாக்டர். மகான், விடுதலைச் சிறுத்தைகள் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.பாவாணன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.இளையபெருமாள், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் முத்து, புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் புதுவை தமிழ்நெஞ்சன், பெரியார் திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சார்லஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.


 
உண்ணாப்போராட்டத்தின் இறுதியில் காங்கிரசின் துரோகத்தனங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டு அதன் அரசியல் ஏட்டின் ஆசிரியர் குழு உறுப்பினது க.அருணபாரதி பேசினார். மேலும் அந்த ஆவணங்களை பரவலாக்குவதன் மூலம் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.



உண்ணாப்போராட்டத்தை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம் முடித்து வைத்துப் பேசினார்.

வெளியிடப்பட்ட ஆவணங்கள்:








நன்றி  www.tamilseythi.com தமிழ்ச் செய்தி இணையதளம்

-----------------------------------------------------------
தோழமையுடன்
      க.அருணபாரதி
  www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:12 PM 0 comments

Friday, February 13, 2009

Fwd: இந்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் 15-02-09 அன்று உண்ணாப்போராட்டம்

சிங்கள இனவெறி அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து
புதுச்சேரியில் சத்தியம் மக்கள் சேவை மையத்தினர் உண்ணாப்போராட்டம்

    ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் நோக்கோடு சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போருக்கு இந்திய அரசு உதவுவது படுபாதகச் செயலாகும்.

    இந்திய அரசின் இப்போக்கைக் கண்டிக்கும் வகையிலும், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போரை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தியும், தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும் கோரிக்கை விடுத்து வரகிற 15-2-09 அன்று புதுச்சேரி சாரம் பகுதியல் கண்டன உண்ணாப் போராட்டம் நடைபெறவுள்ளது.

    இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனத் தலைவர் தே.சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். அவைத் தலைவர் தே.சரவணன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசுகிறார்.

    சத்தியம் மக்கள் சேவை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம், துணைச் செயலாளர் க.ஆனந்த், பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகளும், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக நல இயக்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

    காங்கிரஸ் அரசாளும் புதுச்சேரி மாநிலத்தில் நடக்கவிருக்கும் இவ்வுண்ணாப் போராட்டத்தில், இந்திய அரசிற்கு எதிரான நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக தமிழின உணர்வாளர்கள் பெரும் திரளாக இப்போராட்டத்தில் பங்கு பெற்று வேண்டுமென உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
தே.சத்தியமூர்த்தி,
நிறுவனத் தலைவர்
சத்தியம் மக்கள் சேவை மையம்

தொடர்புக்கு : 9362141055, 9841949462
இணையம்  :
http://sathiyapuratchi.blogspot.com
மின்னஞ்சல்  : anand.k.mail@gmail.com

நாள்  : 12-02-2009,
இடம் : புதுச்சேரி

 
கண்டன உண்ணாவிரதம்
 
இந்திய அரசு!
ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்கள இனவெறி அரசின் போரை உடனே  தடுத்து நிறுத்து!

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு வழங்கிய ஆள், ஆயுத, பண உதவிகளை திரும்பப் பெறு!
 
தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரி!
 
நாள்   : 15-02-09
இடம்   : சாரம் ஜீவானந்தம் சிலை அருகில், புதுச்சேரி.
 
  ----------------------------------------------------  தலைமை   ----------------------------------------------------
தோழர் க.அருணபாரதி,
ஆசிரியர் குழு,
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழ்.
 
  ---------------------------------------------------- முன்னிலை  ----------------------------------------------------
தோழர் தே.சத்தியமூர்த்தி,
நிறுவனத் தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்.

  ----------------------------------------------------  தொடங்கி வைத்தல்    ----------------------------------------------------
தோழர் தே.சரவணன்,
அவைத்தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
  ---------------------------------------------------- கண்டன உரை    ----------------------------------------------------
 
தோழர் சசிகலா ஆறுமுகம்
செயலாளர், 
சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
தோழர் க.ஆனந்த்
துணைச் செயலாளர், 
சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
தோழர் தே.சந்தோஷ்
பொருளாளர், 
சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
தோழர் ம.சீனிவாசன்
துணைத் தலைவர், 
சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
  ---------------------------------------------------- மற்றும்   ----------------------------------------------------
பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள்,
சமூக நல அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்கள்,
அரசியல் கட்சித் தலைவர்கள்

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 8:57 PM 1 comments

Monday, May 19, 2008

தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. மறியல்


இந்திய அரச நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு!
திருச்சி பாரத் மிகுமின் நிலையம் முன் த.தே.பொ.க.  மறியல்
தமிழ் இனத்தின் தற்காப்பு மறியல் போர்
 
நாள் : 20-05-2008, செவ்வாய்
நேரம் : காலை 10.மணி
தலைமை : தோழர் குழ.பால்ராசு
 
தமிழகத்தில் உள்ள இந்திய மிகுமின தொழிற்சாலைகள்(பெல்), தொடர்வண்டித் துறை, துப்பாக்கித் தொழிற்சாலை, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் தூய்மைத் தொழில்கள், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலகம் உள்ளிட்ட பலவற்றில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
 
மேலே குறிப்பிட்ட தொழிலகங்களில் உள்ள உயர் அலுவலர்கள் திட்டமிட்டுத் தமிழர்களை வேலைக்குச் சேர்க்காமல் புறக்கணிக்கின்றனர்.
 
திருச்சி மிகுமின் ஆலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களையும் நிர்வாகப் பிரிவினரையும் வெளி மாநிலத்திலிருந்து வேலைக்குச் சேர்த்து வருகின்றனர்.
 
நிர்வாகப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களைச் சேர்க்கிறார்கள். 2005 முதல் 4 தொகுப்பாக 138 பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொறியியல் கல்லூரிகள் அதிகம். ஆனால் பணியமர்த்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை.
 
தொழிலாளர் பிரிவில் பெல் நிறுவனம் தமிழர்களை மிக மிகக் குறைவாகவே சேர்த்துள்ளது.
 
வேலைக்கு ஆள் எடுப்பது குறித்து பெல் நிறவனத்தில் பணியாளர் கையேடு(Personal Manual)  உள்ளது. அதில் தொகுதி 1 (volume-1),  பிரிவு (A), உட்பிரிவு(a)(Statement  of Recuritment Policy) வேலைக்கு ஆள் சேர்க்கும் கொள்கை பற்றிக் கூறுகிறது. அதில் பயிற்சித் திறனற்றோர் (Unskilled), பாதித்திறனாளர் (Semiskilled), திறனாளர்(Skilled), மேற்பார்வையாளர்(Super visor) ஆகிய தொழில் நிலைப் பிரிவுகளுக்குத் தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெல் அலுவலகர்கள் அவ்வாறு செய்யாமல் நேரடியாக ஆளி் சேர்க்கிறார்கள்.
 
பெல் நிறுவனப் பொது மேலானர்களில் பெரும்பாலோர் வேற்று இனத்தவராக இருப்பதால் தமிழர்களை வேலைக்குச் சேர்க்காமல் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.
 
பல்லாண்டு காலமாக அங்கே பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர், தற்காலிகத் தொழிலாளர் ஆகியோரை முன்னுரிமை அடிப்படையில் நிரந்தரப்படுத்தாமல் வெளிமாநிலத்தவரைப் புதிதாக நிரந்தரப் பணிகளில் சேர்க்கின்றனா.
 
தமிழகமெங்கும் உள்ள தொடர்வண்டித் துறை வேலை வாய்ப்புகளைப் பீகாரிகள் பறித்து வருகின்றனர். அத்துறை அமைச்சர் லல்லு பிரசாத் ஒரு பிகாரி என்பதால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை தராமல் பீகாரிகளைக் கொண்டுவந்து குவிக்கிறார். பொன்மலைப் பணிமனையில் 300 பீகாரிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு இரயில் நிலையங்களில் இந்திக்காரர்களே வேலைகைளைப் பறித்துக் கொண்டுள்ளனர்.
 
திருச்சி அருகே உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையிலும் வெளிமாநிலத்தவர்களே மிகுதியாக வேலை பெற்றுள்ளனர். நரிமணம் பெட்ரோல் ஆலையிலும் வெளியார் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
 
தமிழகம் முழுவதம் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் அயலாரின் ஆதிக்கம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. தனியார் துறை வேலைவாய்ப்பிலும் அயலார் ஆதிக்கம் பெருகி வருகிறது. தமிழக அரசில் பணிபுரியும் இந்திய ஆட்சி(IAS) மற்றும் இந்திய காவல் பணி(IPS) அலுவலர்கள் பெரும்பாலும் வேற்று மாநிலத்தவரே.
 
அயலார் மிகுதியாக  வேலைக்கு வருவதால் ஒரு பக்கம் தமிழர்களின் வேலை வாய்ப்பும் வாழ்வுரிமையும் பறிக்கப்படு்ம். மறுபக்கம் தமிழகத்தில் அயலாரின் குடியிருப்புகள் அதிகரிக்கும்;அவாகளின் மக்கள் தொகை பெருகும். அவாகள் தமிழர்களுக்குப் புறம்பான தங்களின் மொழி மற்றும் பண்பாடுகளைப் பரப்புவர். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே தற்சார்பற்று, பெருமிதம் இழந்து, இரண்டாந்தரக் குடிமக்களாகக் கீழ்நிலை அடைவர்.
 
    ஏற்கெனவே தமிழகத் தொழில், வணிகம் ஆகியவற்றில் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் மேலாதிக்கம் செய்கின்றனர். அவர்கள் கூட்டம் கூட்டமாகத் தமிழகத்தில் வந்து குவிகின்றனர். இந்நிலையில் சென்னையில் தமிழர்களுக்கு வீடு தராமல் பல இந்திக்காரர்களுக்கு மட்டும் வீடு தரக்கூடிய பல வடநாட்டு அடுக்ககங்கள் உள்ளன என்பதை 'தமிழ் ஓசை' நாளிதழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியது. மலையாளிகள் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் சற்றொப்ப மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையினராகப் பெருத்துள்ளனர். தமிழகம் முழுவதுமான பல்வேறு வேலை வாய்ப்புகள், தொழில், வணிகம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மிக விரைவில் தமிழாகள் சிறுபான்மையினராகி அயல் இனத்தவாகள் பெரம்பான்மை ஆகிவிடுவர். தாயகத்தை இழந்துவிடுவர்.
 
இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்தியாவெங்கும் சென்று வசிக்க, தொழில்புரிய ஒருவருக்கு உரிமை உண்டு என்று கூறுவர். ஆனால் அசாம், நாகலாந்து, மராட்டியம் போன்ற மாநிலங்களில் வெளியாரை வெளியேற்றும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. காசுமீரில் வெளி மாநிலத்தவர் சொத்து வாங்க முடியாது. இந்தியாவில் மட்டுமல்லாது பிரிட்டன் பொன்ற அயல்நாடுகளிலும் வெளியார் சிக்கலை எதிர்த்து அம்மண்ணின் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மட்டும் ஏமாளியாக இருக்க வேண்டுமா? தாயகத்தை இழக்க வேண்டுமா? கூடாது. 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதன் நோக்கம் அந்தந்தத் தேசிய இன மக்கள் தங்கள் தாயகத்தில் தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முழுமையாகப் பெற்று முன்னேற வேண்டும் என்பதாகும்.
 
எனவே வெளியார் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நமது போராட்டம் சட்ட விரோதமானதல்ல. வெளியாரை வெளியேற்றப் போராடிய அசாம் மாணவர்களுடன் அன்றையப் பிரதமர் இராசீவ் காந்தி உடன்படிக்கை செய்து கொண்டதையும் நினைவில் கொள்ள வெண்டும்.
 
தமி்ழ்ப் பெருமக்களே! நமது தாயகத்தில் நமது தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவை பறிபோவதைத் தடுக்கும் கொள்கையும் ஆற்றலும் தேர்தல்கட்சிகள் எவற்றுக்குமே இல்லை. அவற்றின் இலக்கு பதவி, பணம், புகழ் என்பவைதாம்.
 
எனவே தற்காப்பு உணர்வுள்ள தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் களத்திற்கு வரவேண்டும். கைகொடுக்க வேண்டும்.
 
நமது கோரிக்கை:
 
  • தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

 

  • தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வாணையம் வழியாக மட்டுமே அந்நிறுவனங்களில் வேலைக்கு ஆள் சேர்க்க வெண்டும்

 

  • தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை அந்நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
திருச்சி மிகுமின் நிலைய வாயிலில் நடக்கும்
அடையாள மறியல் போராட்டத்திற்கு புறப்படுவீர்!
தமிழர்களே வாருங்கள்!
 


Posted By தமிழ்த் தேசியம் to தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி at 5/19/2008 05:37:00 AM
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 5:57 AM 1 comments

Friday, May 2, 2008

சென்னையில் நாளை உண்ணாப்போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை

தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துப் போராடியோரைக்
காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி நாளை
சென்னையில் உண்ணாப்போராட்டம்
 
பெ.மணியரசன் அறிக்கை
 
தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துக் கடந்த 25 மொழிப்போர் நாளன்று சென்னை கோயம்பெடு பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் பேருந்தகளில் தமிழாக்கம கூட இல்லாமல் எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்துக்களைக் கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டத்தைத் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சித் தோழர்கள் நடத்தினர்.
 
    அப்போது கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளா தேன் தமிழ்வளவனும் மற்றம் காவலர்களும் அமைதியாகப் போராட்ட்ததில் ஈடுபட்ட தோழர்களைக் காட்டுமிராண்டித் தனமாகத் தடியால் அடித்துப் படுகாயப்படுத்தினர். ஒரு தோழருக்குக் கை எலும்பு முறிந்தது.
 
        காவல்துறைக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு, அடையாளப்பூர்வமாக ஆங்கில எழுத்துக்களைகட கருப்பு மை பூசி அழித்தத் தோழர்களை சட்டத்திற்கு புறம்பாகத் தடியடி நடத்தியும் இழிவான சொற்களில் திட்டியும் அராஜகம் புரிந்த ஆய்வாளா தேன் தமி்ழ்வளவன் உள்ளிட்டோரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்த்தெசப் பொதுவடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் கடந்த இருமாதங்களுக்கு முன்பேயே உண்ணாப்போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். முதலில் அதற்கு அனுமதி அளித்த காவல்தறை பின்னர் அப்பபோராட்டத்திற்கான அனுமதியை போராட்டம் நடக்கும் தினத்திற்கு முந்தைய நாளில் அவரசக் கடிதம் ஒன்றை அனுப்பி அனுமதி மறுத்தனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் த.தே.பொ.க. வழக்குத் தொடுத்தது. அதன் பயனாக 03-05-3008 சனி காலை 9.00 மண முதல் மாலை 6.00 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாப்போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. உண்ணாப்போராட்டத்திற்கே காவல்துறை அனுமதி மறுத்ததும் அதனை தகர்த்தெறிந்து இப்போராட்டம் நடைபெறுவதாலும் இப்போராட்டம் எழுச்சியடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும்  த.தே.பொ.க.இயக்கத் தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பங்குபெற சென்னை வருகிறார்கள்.
 
        இவ்வுண்ணாப்போட்டத்தைத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு த.வெள்ளையன் அவர்கள் தொடங்கி வைக்கிறார். உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் அவாகள் முடித்து வைக்கிறார். 
 
        ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, இயக்குநர் சீமான், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் கழகத் தலைவர் திர இரா.பாவாணன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மார்க்சியப் பொரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவிஞர் தமிழெந்தி, புலவர் கி.த.பச்சையப்பனார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர். இப்போராட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
 
தோழமையுடன்
தோழர் பெ.மணியரசன்
 பொதுச் செயலாளர்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
 
 
 
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 2:39 AM 0 comments

Saturday, January 12, 2008

[தமிழர் கண்ணோட்டம்] பொங்கல் மலர் 2008 வெளிவந்துவிட்...


உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
 
தமிழரென்று சொல்வோம் தரணியை செல்வோம் !
 
தமிழர் கண்ணோட்டம்
தமிழ்த் தேசிய மாத இதழ்
 
ஆண்டுதோறும் வெளிக் கொண்டு வரும்
பொங்கல் மலர் வெளிவந்துவிட்டது !
 

 < மார்க்சியம் >

< பெரியாரியம் >

 <  தமிழ்த் தேசியம் >

உள்ளிட்ட கருத்தியல்களின் செய்திச் சுரங்கமாக
அறிவுப்பெட்டகமாக வெளிவந்திருக்கும்
 
தமிழர் கண்ணோட்டம்
பொங்கல் மலர் 2008
வாங்கிப் பயன்பெறுங்கள் !

 
 
தொடர்புக்கு
தமிழர் கண்ணோட்டம்,
20/7, முத்துரங்கம் சாலை,
தியாகராய நகர்,
சென்னை -17
பேச  9445295002, 9841949462
 
அஞ்சலில் பெற விரும்புபவர்கள் மேற்கண்ட முகவரிக்கு
ரூ.100 க்கு MO அல்லது DD அனுப்பி வைக்கலம்.
மலர் தங்கள் வீடு தேடி வரும்.
 
http://tamizharkannotam.blogspot.com
http://tamizhdesiyam.blogspot.com
Mail : tamizhdesiyam@gmail.com
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 5:11 AM 17 comments