சத்தியம் மக்கள் சேவை மையம்

Friday, March 9, 2007

தமிழ்த் தேசியம்

தமிழ்த் தேசியம்
'கல் தோன்றி மண் தோன்ற காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி
எம் தமிழ் குடி'.

இவை வெறும் வார்த்தை மட்டுமல்ல நம் முன்னோர் நம் இனத்தின் பெருமையை உணர்த்த விட்டுச் சென்ற அடையாளம்.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிறந்து வளர்ச்சியடைந்து இலக்கிய வளம் மிகுந்து திகழ்ந்து இன்றும் அதனை இழக்காமல் சிறந்து விளங்கும் செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை நாம் சொல்லித் தான் விளங்க வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இருந்த போதும் நாம் அதனை மறந்து தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்ற நமக்கே உரிய பண்புகளை மறந்து விட்டு 'இந்தியன்' என சொல்லிக் கொள்வது எதனாலே என ஆராய்வது அவசியம்.
 நாம் இந்தியர் தான். இந்தியத் துணைக் கண்டத்தில் வசிப்பதினால் மட்டுமே நாம் இந்தியர்களாக இருக்கிறோம். நாம் தமிழ் மொழி பேசுகிறோம். தமிழ் பண்பாட்டை கடைப்பிடிக்கிறோம். ஆனால் நாம் தமிழர் என சொல்லிக் கொள்வதில்லை. நமக்கு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாது என்றாலும் நாம்  இந்தியன் என்றே சொல்லிக் கொள்கிறோம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமே நாம் இந்தியக் குடிமக்களே தவிர இந்தியர்கள் அல்ல எனக் கூறுகிறது. ஏனெனில் இந்தியர்; என்கிற இனம் ஒரு போதும் இருந்ததில்லை என்பது தெளிவான உண்மை.
 ஒரு தேசிய இனம் என்பது இயற்கையாகவே வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தை குறிப்பதாகும். ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே பொருளியல் ஆகிய அம்சங்களை கொண்டது தான் ஒர் இனமாகும். இதன்படி பார்த்தால் தமிழர், மலையாளி, கன்னடர்;, தெலுங்கர்;, சீனர், மங்கோலியர், மராட்டியர் போன்றவை தேசிய இனங்களாகும். ஆனால் இவற்றில் எந்த வகையிலும் இந்தியா சேராது. ஏனெனில் இந்தியா என்பது பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டமாகும்.
 ஆங்கிலேயர் நம் தமிழ் மண்ணையும் மற்ற தேசிய இனங்களின் தாயகங்களையும் தனித் தனியே அடிமைபடுத்தி வந்தனர். அவர்களிடமிருந்து போராட அனைத்து தேசிய இனங்களும் சேர்ந்து பேராடின. முடிவில் அவர்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்ற பெயரில், ஆதிக்கக்காரர்களான இந்திக்காரர்களிடமும், பார்ப்பன பனியா சேட்டுகளிடமும் சுதந்திரத்தை தாரைவார்த்து விட்டு சென்றுவிட்டனர். அதை சாதகமாக்கிக் கொண்ட இந்தி, பார்ப்பன, பனியா ஆதிக்கக்காரர்கள் மத்திய அரசு என்கிற பெயரில் மாநில தேசிய இன மக்களை அடிமைகளாக்கி அவர்களை சுரண்டி வாழ்வதை அரசியலின் மூலம் சட்டமாக்கினார், அதை உடைத்து மாநில அரசுகளுக்கு தன்னுரிமை கேட்டு போராடும் அமைப்புகளுக்கு மத்திய அரசு 'தீவிரவாதம்' மற்றும் 'பயங்கரவாதம்' என்ற பெயரில் முத்திரை குத்தி அவர்களை அடக்கி ஒடுக்குகின்றனர்.
தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட பல அமைப்புகள் சரித்திரத்தையே மாற்றி அமைத்திருக்கின்றன என்பது வரலாறு நமக்கு சொல்லித் தரும் பாடம். இதற்கு சமீபத்திய உதாரணம்: நேபாள மாவோயிஸ்ட்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அது தீவிரவாத இயக்கம். ஆனால், இன்று நேபாள அரசின் அச்சாணியாக இருப்பது அந்த அமைப்பு தான். அதற்கு யார் தீவிரவாத பட்டத்தை சூட்டியது? அதை ஒடுக்க நினைத்த அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க சக்திகள் தான்…
 வன்முறையை நாம் ஒரு போதும் போராட்ட முறையாக நாடவில்லை. அதை தீர்மானிப்பவர்கள் அடக்க நினைக்கும் ஆதிக்க சக்திகள் தான். சீன புரட்சி மேதை மாவோ சொல்வார் 'எமது ஆயுதங்களை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்'.
 வெறும் 200 வருடங்களாக இருக்கும் 'இந்தியன்' என்கிற போலி அடையாள சொல்லுக்கு தரும் மரியாதையை இனி 5000 வருடங்களாக வரலாற்றில் நிலைத்து நிற்கும் 'தமிழன்' என்கிற நம் உண்மையான அடையாளத்திற்கு கொடுப்போம். இந்தியா என்று பேசிக் கொண்டு இங்கு கோலோச்சி வாழ்ந்து வரும் சேட்டு உள்ளிட்ட வடநாட்டவர்கள் இனியும் நம்மை சுரண்டி வாழக்கூடாது. நம் புதுச்சேரியின் புதல்வர் புரட்சிக்கவிஞர்pன் வரிகளான 'அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க' என்கிற முழக்கத்தை செயல்படுத்த முனைவோம். ஆக இந்தியர் என்று இனியும் பேசி நம் மாநில தன்னரிமை எனப்படும் சுயநிர்ணய உரிமைகளை இழக்க வேண்டாம். ஆகவே நாம் தமிழர் என்கிற அடையாளத்தை நிலைநிறுத்துவதிலும் தமிழை பகைவர்களிடமிருந்து பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்தி பேராட வேண்டும்.
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:10 PM

0 Comments:

Post a Comment

<< Home