சத்தியம் மக்கள் சேவை மையம்

Monday, April 30, 2007

உலகத் தொழிலாளர் தினம்


உலகத் தொழிலாளர் தினம்
8 மணி நேர வேலைக்காக சிக்காகோவின் வீதிகளில்
தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தின் நினைவாக
கொண்டாடப்படும்
உலகத் தொழிலாளர்கள் தினம் மே 1
அன்று
புரட்சிகர தலைவர்களின் பாதையில்
தமிழ்த் தேசிய விடுதலைக் காண அணிதிரள்வோம்..

உலகத் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள் !

--
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 3:40 AM 0 comments

Wednesday, April 18, 2007

பூமியை காக்க...

இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்!

Thanks to: http://radhasriram.blogspot.com/2007/04/51.html

ஏப்ரல் மாத டைம் பத்ரிகையில் க்லோபல் வார்மிங்கை(Global Warming) கட்டுபடுத்த நாம் ஒவ்வொருவரும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி ஒரு ஐம்பத்தி ஒரு விஷயங்கள் எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சிலதை நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. நடைமுறை வாழ்கையில் கடைபிடிக்க முடியும் என்று எனக்கு தோன்றியவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.

1) லைட் பல்ப்ஸ்.

நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல்ப்பை (conventional incandescent bulbs) விடுத்து குழல் விளக்கை சுற்றி வைத்த மாறி இருக்கும் பல்பை உபயோகிப்பது -{compact fluorescent light bulb(CFL)} நல்லது. CFL சாதரண பல்பைவிட இரண்டிலிருந்து ஐந்து மடங்கு விலை அதிகமாக இருந்தாலும் இதன் நீடித்த உழைப்பு அதை சரிகட்டி விடுகிறது. ஒரு 7 வாட் CFL பல்ப் ஒரு 40 வாட் ரெகுலர் பல்புக்கு சமம். இது ஒரு சிறந்த
எனர்ஜி சேவராக செயல் படுகிரது. ஆனால் இந்த வகை பல்பில் 5 mg மெர்குரி இருப்பதால் இதை மற்ற எல்லாவகை கழிவு பொறுள்களுடன் எறிய முடியாது.

2) துணி துவைத்தல்:



மிகவும் இன்றியமையாத ஒரு தினப்படி செயல். அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை!! ஆனால் அதைதான் இங்கு ஒரு சிறந்த எனர்ஜி சேவராக குறிபிடுகிரது Time Magazine. கொஞ்சம் கொஞ்சமாக (வாஷிங் மஷின் உபயோகிப்பவர்களுக்கு!) துணிகளை போட்டு தோய்ப்பதைவிட, துணிகளை சேர்த்து வைத்து ஒரு பெரிய கும்பலாக தோயித்து எடுப்பது ஒரு சிறந்த ஷக்தி சேமிப்பு. அதிலும் கொதிக்கும் சுடு தண்ணியை உபயோக படுத்தாமல், மிதமான சூடுள்ள தண்ணியை உபயோக படுத்துதல் நல்லது. ரொம்ப முக்யமான இன்னொரு விஷயம், ட்ரைய்யெரை(dryer) உபயோக படுத்தாமல் கொடி கட்டி துணியை உலர்த்துவதால் நம் வாஷிங் மெஷினால் உற்பத்தியாகும் 90% co2 வை குறைக்கலாம்.

3) முடிந்த வரை பேருந்தை உபயோகியுங்கள்!:



இது எவ்வளவு தூரம் சாத்யம் என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே நம் சவுகரியத்துக்கு தகுந்தாற்போல் போக வர பழகி விட்டோம். பஸ்ஸுக்காக காத்திருந்து போவது எல்லாம் மலையேறி போய்விட்டது. இருந்தாலும் போக்குவரத்து மட்டுமே அமெரிக்காவில் 30% கார்பண்டை ஆக்சைட் உமிழ்தலுக்கு காரணமாக உள்ளது நிறைய கவலையை அளிக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பொதுதுறை போக்குவரத்து, சில பெரிய நகரங்களை தவிர வேறு எங்குமே சரியாக இருப்பதாக தெரியவில்லை. பொதுதுறை போக்குவரத்தை(பேருந்து மற்றும் புகைவண்டி) உபயோகிப்பதால் ஒரு வருடத்துக்கு 1.4 மில்லியன் பெட்ரோலை சேமிக்கலாம். அவ்வாறு சேமிப்பதால் 1.5 மில்லியன் அளவு co2 உமிழ்தலை தவிற்கலாம். நம்மால் நிச்சயம் செய்யகூடிய ஒன்று என்றால் car pooling!

4) கணிணி மூலம் பணம் செலுத்தலாம்!

உங்கள் கணிணி மூலம் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் மாதிரி பல வகையான கட்டணங்களை செலுத்தினீர்களானால், மரங்களை மட்டும் காக்கவில்லை, காகித காசோலைகளை எடுத்து செல்லும் விமானம் மற்றும் லாரிகளின் பெட்ரோல் செலவையும் கட்டுபடுத்துகிரீர்கள். அது உமிழும் co2 வை மட்டுபடுத்துகிரீர்கள்.

5) ஜன்னலை திறந்து வையுங்கள் !

குளிரூடுபெட்டியை மிதமாக உபயோகியுங்கள்.

6) ப்லாஸ்டிக் பைகளூக்கு ஒரு பெரிய தடா போடுங்கள்!

இந்த பைகள் அழிய தோராயமாக 1000 ஆண்டுகள் ஆகின்றன. துணி பையை உபயோகிப்பது சிறந்தது.

7) மூங்கில் வேலி !

உங்கள் வீடுகள் மற்றும் தோட்டத்ற்க்கு மூங்கில் வேலி அமையுங்கள். மூங்கில் ஒரு நாளைக்கு 1 அடி வளரகூடியது. ஒரு ரோஜா செடியை விட பல மடங்கு co2 வை தன்னுள் ஈர்த்துக்கொள்ளகூடிய ஷக்தி உடையது.

8) உள்ளூர் விவசாயியை ஆதரியுங்கள்!

பெரிய பெரிய கடைகளில் போய் காய் கனிகள் வாங்குவதை தவிறுங்கள். உள்ளூர் சந்தையில் வாங்குவதால், பல மயில் தூரத்திலிருந்து பெரிய பெரிய வாகனங்களில் சாமான்கள் கொண்டு வரபடுவதை தவிற்கிரீர்கள். இதன் மூலம் பெட்ரோலும் அதனால் உமிழபடும் co2 வும் குறைகிறது.

9)உபயோகிக்காதபோது கணிணியை அணைத்து வையுங்கள்!

ஸ்க்ரீன் சேவெரை உபயோகிப்பதால் எந்தவித சேமிப்பும் நமக்கு கிடைப்பதில்லை. உபயோகிகாத போது அணைத்து வைப்பது நல்லது.

10) விளக்கை அணையுங்கள்!

வேலை பார்க்கும் இடத்தில் மற்றும் வீட்டிலும் தேவையில்லாத விளக்குகளை கண்டிப்பாக அணைத்து வையுங்கள். பிள்ளைகளையும் அதற்கு பழக்குங்கள் :):)

இதில் குறைந்தது ஒன்றை மட்டுமாவது நாம் கடைபிடிக்க முடிந்தால், இந்த பூமிக்கு பெரிய சேவை செய்ததாக நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம். சிறு துளி பெறு வெள்ளம்!!

கீழே கொடுத்திருக்கும் லின்கையும் போய் பார்க்கவும்!

http://www.earthday.org/

P.S மொழிபெயர்ப்பு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்.......பொறுத்துகொள்ளவும்!! நன்றி :):)

--
செல்வன்

http://www.holyox.tk
http://groups.google.com/group/muththamiz
தனிமடல் தொடர்புக்கு: holyape@gmail.com
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:41 PM 0 comments

Friday, April 13, 2007

நாளை அம்பேத்கார் பிறந்தநாள்


டாக்டர் அம்பேத்கர்
தெ.மதுசூதனன்

அம்பேத்கர் பெரிய அறிஞர். இந்தியாவுக்கு அரசியல் சட்டம் வகுத்தளித்த மேதை. முதன்முதலில் வெளிநாடு சென்று டாக்டர் பட்டம் பெற்ற பேரறிஞர். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது புக்கர் வாஷிங்டனின் கருத்துக்களால் கவரப்பட்டுத் தனது வாழ்நாளைத் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட அண்ணல். தனது பார்ப்பன ஆசிரியரின் பெயரைத் தன் பெயராக வைத்துக் கொண்ட நன்றி மறவாப் பெருந்தகையர். இப்போதெல்லாம் இப்படி அம்பேத்கரைக் கெளரவப்படுத்தி அறிமுகம் செய்யும் போக்கு பரவலாக உள்ளது.

இன்னொருபுறம் தலித் மக்களின் கலங்கரை விளக்காகக் கருதுவதும் அந்த விளக்கின் ஒளியில் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும் போக்கும் சில மட்டங்களில் உண்டு. அத்துடன் அம்பேத்கரை ஒரு மீட்பராக, தெய்வாம்சம் பொருந்தியவராக நிறுத்தப்படும் போக்கும் உண்டு.

எவ்வாறாயினும் அம்பேத்கர் குறித்த அக்கறை அவரது சிந்தனை வழியில் இயக்கமாக அணிதிரளும் போக்கு அவரது நூல்கள் கட்டுரைகள் யாவும் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டித் தமிழ்ச் சூழலில் அதிகம் கவனிப்புப் பெற்றது. இதுவரையான தமிழர்களின் செயற்பாட்டில் புதிய திசை திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்திய விடுதலைக்குப் பின் சமூக அரசியல், கருத்தியல் சக்திகளால் உருவாக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் படிமம் தமிழ்ச் சூழலில் தற்போது இல்லை. மாறாகத் தலித் மக்களுடைய குரலாக, தலித் சிந்தனையாளராக, கலக அரசியலாளராக எனப் பன்முக அடையாளப்படுத்தலின் புதிய பரிமாணமாக, மறு கண்டுபிடிப்பாகவே அம்பேத்கர் உள்ளார்.

இந் நிலையில் அம்பேத்கரிடம் இருந்த பல்வேறு தன்மைகளையும் செயல்பாடுகளையும், அவரது கொள்கைச் செயற்பாட்டில் ஏற்பட்ட சிதைவுகளையும், இவற்றுக்கான பின்புலங்களையும் சக்திகளையும் எனப் பன்முகப்பட்ட ரீதியில் புரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அம்பேத்கரை வெறும் மீட்பராக, தெய்வமாக மட்டும் நோக்காமல் அவரது கருத்து நிலைத் தொடர்ச்சியின் இன்றைய பொருத்தப்பாடு என்ற பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். சம காலச் சமூக அரசியல், கருத்தியல் வரலாற்றினை அம்பேத்கர் வழியே புரிந்துகொள்வதுடன் மேலும் அவரது கருத்தியலை வளர்த்துச் செல்ல வேண்டும்.

இந்த அடிப்படையில் அம்பேத்கரின் சமூகக் கலகக் குரலின் பிரதான அம்சங்களாகச் சிலவற்றை நாம் அடையாளப்படுத்த முடியும். −ட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலைகளிலும், அதிகாரங்களிலும் பங்கு கோருதலும் அதன் மூலமாகத் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலையை ஓரளவு சாத்தியப்படுத்தலும்.

இந்துமத எதிர்ப்பு
பொருளியல் சிந்தனை
தாராள சனநாயகத்தில் ஈடுபாடும் பயிற்சியும்
சீர்திருத்தவாத முற்போக்குச் சிந்தனை
ஆன்மிக ஈடுபாடு
மக்கள் நலனுக்கான செயற்பாடு

அம்பேத்கரின் பன்முக ஆளுமைகள் அவரது காலத்தின் பார்வையிலும் பணிகளிலும் தலித் மக்களின் விடுதலைக்கான சிந்தனைச் செயல்பாட்டுத் தளத்தை வலிமையாக்கி உள்ளது.

அம்பேத்கர் வலியுறுத்திய 'இடஒதுக்கீடு' தொடர்பாக மட்டும் தற்போது நாம் கவனத்தைக் குவித்துக் கொள்வோம்.

'இந்தியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அரசு வேலை வாய்ப்பு முழுவதும் சூழ்நிலை காரணங்களால் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடன் தொடர்புடைய சாதிகளினருக்கும் உரிய சொத்தாகி விட்டது. இது ஆபத்தானது. பார்ப்பனரல்லாத மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் இசுலாமியர்கள் அனைவருக்கும் 'இந்தியா' என்ற அங்கீகாரம் அளிக்கப்படாமல் இந்த வாய்ப்புகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுப் பணிகளில் தங்களுக்குரிய பங்கைப் பெறுவதற்கெனத் தீவிரப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இப் போராட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படைக் காரணம் பொதுப்பணிகளில் அரசுக்குத் தேவைப்படுவது திறமை மட்டுமே. சாதிகளையும், குலங்களையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்பதுதான். கல்வித் திறமையே, திறமையின் அடிப்படையாகக் கொண்டு பொதுப்பணிகளுக்குப் போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என்கின்றனர். கல்வி பெறுவதற்கான அடிப்படைச் சூழ்நிலை இங்கு இல்லை என்பது தெளிவாக உள்ள நிலையில், பிற்படுத்தப்பட்ட சாதிகள் அரசுப் பணிகளுக்குத் தேர்வுப் போட்டிகள் மூலமே செல்ல வேண்டும் என்பது அவர்களை ஏமாற்றுவதாகும்'' இவ்வாறு அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இதனாலேயே கல்வியைப் பரப்புவது, அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் பெற்றுத் தருவது, கிராமப் புறங்களிலுள்ள தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்நிலையை முன்னேற்றுவது ஆகியவற்றை வாழ்க்கையின் மூன்று குறிக்கோள்களாகக் கொண்டு செயற்பட்டுள்ளார். இதன் விளைவாக மத்திய அரசுப் பணிகளில் முதன் முதலாக 1943-இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 8.33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னால் 1947-இல் இது 12.5 சவீதமாக உயர்த்தப்பட்டது.

நாடாளுமன்ற அமைப்பிலும் குடியாட்சி மதிப்பீடுகளிலும் அசையாத நம்பிக்கை கொண்டு செயற்பட்டவர் அம்பேத்கர். −தனாலேயே அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் பெற முடிந்தது. −தனால் −ந்துப் பெரும்பான்மையினருக்கு எதிரான தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும் என நம்பினார்.

1947-இல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ''−ந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் உள்ளனர். −ம் மக்களுக்கான வாய்ப்புகள் விகிதாசாரப்படி அளிக்கப்படா விட்டால், எஞ்சியுள்ள 70 சதவீத மக்கள் முழுமையாக முன்னேறினாலும் ஒட்டு மொத்த −ந்தியாவின் முன்னேற்றம் 50 சதவீதத்தைத் தாண்டாது. எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், −ட ஒதுக்கீட்டின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். −துவே, ஒட்டுமொத்த −ந்தியாவின் உயர்வுக்கு வழி வகுக்கும் எனக் குறிப்பிட்டார்.

சமூகத்தில் தீண்டாமை ஒழியும் வரை −டஒதுக்கீடு −ருக்க வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியல் சட்ட அவையில் தான் பங்கு கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

ஆனால், அன்று முதல் −ன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் விகிதாசாரப்படி −டஒதுக்கீடு கிடைக்கவில்லை. ஏறத்தாழ 17 ஆயிரம் −டங்கள் −ன்றளவும் நிரப்பப்படாமலே உள்ளது. தமிழகத்தில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் நடைபெறுகிறது. திராவிட −யக்கத்தின் முதன்மையான கொள்கையில் ஒன்று −ட ஒதுக்கீடு. ஆனால், அவர்கள் அதைச் சரிவர −ன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆலய நுழைவு போன்றவற்றையெல்லாம் விட கல்வி மற்றும் சமூகத் தரத்தில் முன்னேற்றம் பெறச் செய்வதே தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதற்கான சிறந்த வழி என்றும் கருதினார் அம்பேத்கர். சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அதிக அளவில் பங்கு பெறுவதும் −தற்குத் துணைபுரியும் என அவர் நம்பினார். பாராளுமன்றத் தொகுதிகள் என்பன அவரது முயற்சியின் விளைவே.

−ன்றுள்ளது போல் வெறும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளும், பிற சாதியினருடன் −ணைந்து வாக்களிக்கும் உரிமையும் மட்டும் அவர் கேட்கவில்லை. மாறாக சிறப்பு வாக்காளர் தொகுதி. −தன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் −ரு வாக்குரிமைகளைப் பெறுவர். பிற சாதியினருடன் −ணைந்து ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒன்று. தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே வேட்பாளராக நிற்கும் தொகுதிக்கான வாக்குரிமை மற்றது.

தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை மட்டுமே நம்பி நின்று வெற்றி பெறும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளருக்கு எந்த வகையிலும் ஆதிக்கச் சாதியினரை நம்பியிருக்கும் அவசியம் −ருக்காது. மாறாக −ரு சாராரும் வாக்களிக்கும் தொகுதியாக −ருந்தால் ஆதிக்கச் சாதியினரின் 'நம்பிக்கைக்குகந்த' தாழ்த்தப்பட்டவரே வெற்றி பெற முடியும். அம்பேத்கரின் முயற்சியின் விளைவாகவே அன்றைய ஆங்கிலேய அரசு −த்தகைய உரிமைகளை வகுப்புப் பிரதிநிதித்துவத் தீர்ப்பு (ஆகஸ்டு 1932) மூலம் தாழ்த்தப்பட்டோருக்கும் −தரச் சிறுபான்மையினருக்கும் அளிக்க நேர்ந்தது.

காந்தி, −சுலாமியருக்கும் சீக்கியர்களுக்கும் −த்தகைய உரிமைகள் வழங்கப்படுவதை ஏற்றுக் கொண்டார். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சிறப்புத் தொகுதிகள் வழங்குவதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே காந்தி எரவாடா சிறையில் −ருந்தபடியே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். −தனால் சிறப்பு வாக்காளர் கோரிக்கையைக் கைவிடும்படி சகல தரப்புகளிலிருந்தும் அம்பேத்கருக்கு அழுத்தம் கொடுக்கப்படலாயிற்று.

காந்தியின் உண்ணாவிரதத்தை 'அரசியல் ஸ்டண்ட்' என அம்பேத்கர் எள்ளி நகையாடினார். அன்றைய உயர்சாதிகளின் பத்திரிகைகள் அம்பேத்கரைத் துரோகி எனச் சாடின. அன்றுள்ள நெருக்கடி அரசியல் சூழலில் சிறப்பு வாக்காளர் தொகுதி என்ற கோரிக்கையை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. −தற்குப் பதிலாக −ன்றுள்ள வடிவிலான ஒதுக்கப்பட்ட தொகுதி என்கிற நிலைமை பூனா ஒப்பந்தத்தின் மூலம் (செப்.24,1932) ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

''என் முன்னால் −ரண்டு வெவ்வேறான பணிகள் கடமைகள் பிரச்சனைகள் −ருந்தன. மனிதத் தன்மையுடன் - மனிதப் பண்புடன் மரணத்திலிருந்து காந்தியைக் காப்பாற்றும் கடமை ஒரு புறம். பிரதமர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க முன் வந்துள்ள அரசியல் உரிமைகளை - அவர்களுக்குக் காப்பாற்றித் தரும் கடமை மற்றொருபுறம்.

−ந் நிலைமையில் மனித நேயத்தின் கட்டளையை அறைகூவலை ஏற்க முன் வந்தேன். திரு. காந்தி மன நிறைவு அடையும் வகையில் வகுப்புத் தீர்வு மாற்றப்படுவதற்கு −ணங்கினேன். −வ்வாறு உருவான உடன்பாடே பூனா ஒப்பந்தம் என்பதாகும்.''

மீண்டும் தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு, சிறப்பு வாக்காளர் கோரிக்கையை முன் வைத்தது (செப். 23, 1944). ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குரிமையைப் பறித்த பூனா ஒப்பந்தம் ஒழிய வேண்டும் என்கிற குரலை −றுதி வரை அம்பேத்கர் ஒலித்து வந்தார். சிறப்பு வாக்காளர் தொகுதி என்ற கோரிக்கை −ன்றுவரை கைகூடவில்லை. மண்டல்குழு அறிக்கைக்கான எதிர்ப்புக் குரலோடு தாழ்த்தப்பட்டவர்களுக்கான −ட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டுமென்ற குரல்களும் ஆங்காங்கு வன்மையாக ஒலித்ததை நாம் மறந்து விடக் கூடாது.

அம்பேத்கார் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் தாழ்த்தப்பட்ட மக்களை மேம்படுத்த இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் - கட்சிகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் தாழ்த்தப்பட்ட மக்களில் கல்வியறிவு பெற்றவர்கள் 22 சதவீதத்தினர் தான். −ந்த மக்களில் 50 சதவீதத்தினர் கூலி விவசாயிகள். நாட்டிலுள்ள கொத்தடிமைகளில் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 4% மட்டுமே உள்ளனர். நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 30% ஆக இருக்க, தாழ்த்தப்பட்டோரது மக்கள் தொகையில் இது 50% ஆக இருக்கிறது.இதுவே தற்போதைய நடைமுறை.

ஆக, தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இட ஒதுக்கீடு பயனுள்ளதாகவே இருக்கும்.இந்திய அரசியல் சட்டம் கூட இட ஒதுக்கீட்டை முழுமையாக அங்கீகரிக்கிறது. இருப்பினும் இட ஒதுக்கீடு சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. காலம் காலமாக வாய்ப்பு வசதிகள் பெற்று அதிகாரத்தில் இருந்து வரும் ஆதிக்கச் சாதியினர் தங்களின் அதிகாரத்தை வாய்ப்புகள் வசதிகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க மறுக்கின்றனர்.

ஆனாலும், தீண்டாமையும் சாதிக் கொடுமைகளும் இருக்கும் வரை இட ஒதுக்கீடும் இருந்தாக வேண்டும் என்கிற அம்பேத்கரின் சிந்தனை இன்றும் நினைவு கூரப்பட வேண்டும்.

"அமைச்சரவைக்குள் நடைபெறும் அதிகார அரசியலிலோ நிரப்பப்படாமல் உள்ள துறைகளைப் பறிப்பதற்கு நடைபெறுகின்ற போட்டிகளிலோ - நான் ஒருபோதும் பங்கு கொண்டதில்லை. நான் தொண்டு செய்வதில், அதிலும் அமைச்சரவையின் தலைமையை ஏற்றுள்ள பிரதமர், எனக்கு ஏற்ற அளவு எனக் கருதி அளித்த பதவியில் - பணி செய்வதிலேயே நம்பிக்கை கொண்டுள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை என்றால், நான் மனிதனே இல்லை.

இந்த அரசின் மீது எனக்கு அதிருப்தி ஏற்படுத்திய மற்றொரு செய்தியை இப்பொழுது குறிப்பிடுகின்றேன். அது பிற்படுத்தப்பட்ட மற்றும் தீண்டத்தகாத மக்களை இவ்வரசு நடத்தும் முறையாகும். அரசியல் சட்டத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை என்பதற்காக நான் பெரிதும் வருந்துகின்றேன். இப் பணியை, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட குழு அளிக்கின்ற பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக விடப்பட்டதாகும். அரசியல் நிர்ணயச் சட்டம் நிறைவேற்றி ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இதற்கென குழு அமைப்பது குறித்து அரசு இதுவரை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

தீண்டத்தகாத மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், எனக்கு நிறைவளிப்பதாக இல்லை. இருப்பினும் அரசு அவற்றைச் செயல்படுத்துவதில் கண்டிப்பைக் காட்டும் என்கிற நம்பிக்கையிலும் - அவை பயன்படும் என்கிற எண்ணத்திலும் அவற்றை நான் எற்றுக் கொண்டேன். ஆனால், தீண்டத் தகாத மக்களின் இன்றைய நிலை என்ன? நான் பார்த்தவரையில் முன்பிருந்த நிலையே நீடிக்கின்றது. பழைமை வாய்ந்த அதே கொடுங்கோன்மை, பழமையான ஒடுக்குமுறை, பழமையான பாகுபாடுகள் முன்பும் இருந்தன.இப்பொழுதும் இருக்கின்றன.''

இவ்வாறு தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகிய போது (11.10.1951) வெளியிட்ட அறிக்கையில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்தக் கசப்பான அனுபவம் இன்றும் தொடர்கிறது. இதனையே குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் தனது குடியரசு தின உரையில், ''இந்தியச் சமுதாயத் தளத்தில் ஒரு வகையான எதிர்ப்புரட்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. தலித்துகளுக்குக் கொடுக்கப்படுகின்ற சில சலுகைகள் அவர்களுக்குத் தானமாகக் கொடுக்கப்படுவதில்லை. மாறாக அது அவர்களது உரிமை என்னும் சமுதாய நீதியைக் காக்கும் ஒரு செயல்பாடாகவே உள்ளது என்பதை நாம் மறந்து விடுகிறோம்'' என்றார்.

ஆக, அம்பேத்கர் அன்றே வலியுறுத்திய தனித்துவச் சிந்தனை, குடியரசுத் தலைவர் உரையிலும் வெளிப்பட்டுள்ளது. 'இந்தியாவில் தீண்டத் தகாத மக்களின் நிலையினைப் போன்று உலகில் வேறு எங்கேனும் ஒர் இனத்தின் நிலை இருக்குமா?'' என்று அம்பேத்கார் அன்று கேட்டதையே இன்றும் நாம் கேட்க வேண்டியுள்ளது.

நாளை அம்பேத்கார் பிறந்தநாள்
 
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 5:09 AM 0 comments

Sunday, April 8, 2007

அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்!

அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்!

செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள அத்தியூரைச் சேர்ந்த பழங்குடி இருளர் பெண் விஜயாவை, ஒரு திருட்டு வழக்கில் அவரது பெரியப்பா மகன் வெள்ளையனைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார் ஆறுபேர் கடந்த 29-7-1993 அன்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பல்வேறு போராட்டங்கள், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழக அரசு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2-7-1997 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் புதுச்சேரி போலீசார்களான நல்லாம் கிருஷ்ணராய பாபு (உதவி ஆய்வாளர்), வி.ராஜாராம் (தலைமைக் காவலர்), ஜி.பத்மநாபன் (காவலர்), கே.முனுசாமி (காவலர்), ஜி.சுப்புராயன் (காவலர்), கே.சசிகுமார் நாயர் (தலைமைக் காவலர்) ஆகியோர் விஜயாவை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட விஜயாவின் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் முன்னாள் - அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம். ரகுமான் ஷெரிப் அவர்கள் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது காவல்துறையினர் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.

அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.ரகுமான் ஷெரிப், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், புதுச்சேரி கோ.சுகுமாரன், பேராசிரியர் பா.கல்யாணி ஆகியோரின் ஒத்துழைப்பாலும், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆதரவோடும் 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் கடந்த 11-8-2006 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு. என். ரத்னராஜ் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். புதுச்சேரி போலீசார் ஆறுபேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 31,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் விஜயாவுக்கு 13 ஆண்டுகள் கழித்து நீதிகிடைத்தது அனைவருக்கும் ஆறுதல் அளித்தது.

இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புதுச்சேரி போலீசார் ஆறு பேருக்கும் கடந்த 6-11-2006 மற்றும் 8-11-2006 ஆகிய நாளிட்ட உத்தரவின்பேரில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.சி.ஆறுமுகம் ஆகியோர் பிணை வழங்கியுள்ளனர். தண்டனை வழங்கி மூன்று மாதத்திற்குள் பிணை வழங்கப்பட்டது என்பது விஜயாவுக்கு காலங்கடந்து கிடைத்த நீதியைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்த புதுச்சேரி போலீசார் புதுச்சேரி அரசில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட நாள் வரை அதாவது 13 ஆண்டுகள் பணியில் இருந்து வந்தனர். மேலும், பலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 5-1-2007 அன்றுதான் ஆறு போலீசாரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை வேகப்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புப் பெற குற்றவாளிப் போலீசார் முயற்சி செய் வருவதாக அறிகிறோம். வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அவர்களின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

இச்சூழலில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பிணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடர வேண்டியதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் மேற்கொண்டு வருகிறார். தில்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி இவ்வழக்கில் ஆஜராகி வழக்கை நடத்த உள்ளார். இதற்கான நடைமுறை செலவுத் தொகை குறைந்தபட்சம் ரூ.10,000/- தேவைப்படுகிறது. மேலும், 13 ஆண்டு காலமாக விஜயா வழக்கைப் பார்த்ததினால் பேராசிரியர் கல்யாணி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலவாகியுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

அத்தியூர் விஜயாவிற்கு கிடைத்துள்ள நீதியை நிலைநாட்டவும், தொடர் சட்ட நடவடிக்கைகளுக்கும் தங்களிடம் பொருளுதவி எதிர்நோக்குகிறோம். அருள் கூர்ந்து தாங்கள் தங்களால் முடிந்தளவு நிதி அனுப்பி வைத்து விஜயாவுக்கு நீதி கிடைத்திட உதவ வேண்டுகிறோம்.


பேராசிரியர் பா.கல்யாணி
கோ.சுகுமாரன்


முகவரி: 15, முதல் மாடி,
 9-ஆவது குறுக்கு வடக்கு விரிவு,
ரெயின்போ நகர்,
புதுச்சேரி - 605 011.
பேச: 98940 54640

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 8:56 PM 0 comments

Friday, April 6, 2007

பெண்களும் சட்டமும்

பெண்களும் சட்டமும்
பெண்களின் அடிப்படை உ¡¢மைகளைப் பாதுகாக்கும் முக்கிய சட்டங்கள்

304பி(1) வரதட்சணை இறப்பு : குறைந்த பட்சம் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை. ஆயுட்கால சிறைத் தண்டனைக்கும் வழிவகை உண்டு.

313, 314, 315(2) : கட்டாயக் கருச்சிதைவின் போது பெண்ணின் மரணம் நேர்ந்துவிட்டால் காரணமானவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம். ஆயுட்கால சிறைத் தண்டனைக்கும் வழிவகை உண்டு.

354(3) மானபங்கம், வன்முறை : இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

366, 366ஏ (5) கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளும் குற்றத்திற்கு பத்தாண்டு சிறை மற்றும் அபராதம்.

376 (6) பாலியல் வல்லுறவு : ஏழு ஆண்டுக்கு குறையாத சிறை. அதிகபட்சம் பத்தாண்டு அல்லது ஆயுட்காலச் சிறை மற்றும் அபராதம்.

493(7) கணவன் என்று ஏமாற்றி பெண்ணுடன் உடலுறவு கொள்வது : பத்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.

494(8) மனைவி உயிருடன் இருக்கும்போது மீண்டும் வேறு திருமணம் செய்தல் : ஏழாண்டு சிறை மற்றும் அபராதம்.

495(9) ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து மறுமுறை திருமணம் செய்தல்: பத்தாண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.

498(10) திருமணமான ஒரு பெண்ணை ஏமாற்றிக் கடத்திச் சென்று தகாத உடலுறவுக்கு வற்புறுத்துதல்: இரண்டாண்டு சிறை மற்றும் அபராதம்.

509(1) பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கில் பேசுவது, ஒலி எழுப்புவது, சைகை காட்டி பெண்ணின் அந்தரங்கத்துக்குள் அத்து மீறல் : ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம்.

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 3:47 AM 0 comments