சத்தியம் மக்கள் சேவை மையம்

Friday, April 6, 2007

பெண்களும் சட்டமும்

பெண்களும் சட்டமும்
பெண்களின் அடிப்படை உ¡¢மைகளைப் பாதுகாக்கும் முக்கிய சட்டங்கள்

304பி(1) வரதட்சணை இறப்பு : குறைந்த பட்சம் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை. ஆயுட்கால சிறைத் தண்டனைக்கும் வழிவகை உண்டு.

313, 314, 315(2) : கட்டாயக் கருச்சிதைவின் போது பெண்ணின் மரணம் நேர்ந்துவிட்டால் காரணமானவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம். ஆயுட்கால சிறைத் தண்டனைக்கும் வழிவகை உண்டு.

354(3) மானபங்கம், வன்முறை : இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

366, 366ஏ (5) கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளும் குற்றத்திற்கு பத்தாண்டு சிறை மற்றும் அபராதம்.

376 (6) பாலியல் வல்லுறவு : ஏழு ஆண்டுக்கு குறையாத சிறை. அதிகபட்சம் பத்தாண்டு அல்லது ஆயுட்காலச் சிறை மற்றும் அபராதம்.

493(7) கணவன் என்று ஏமாற்றி பெண்ணுடன் உடலுறவு கொள்வது : பத்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.

494(8) மனைவி உயிருடன் இருக்கும்போது மீண்டும் வேறு திருமணம் செய்தல் : ஏழாண்டு சிறை மற்றும் அபராதம்.

495(9) ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து மறுமுறை திருமணம் செய்தல்: பத்தாண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.

498(10) திருமணமான ஒரு பெண்ணை ஏமாற்றிக் கடத்திச் சென்று தகாத உடலுறவுக்கு வற்புறுத்துதல்: இரண்டாண்டு சிறை மற்றும் அபராதம்.

509(1) பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கில் பேசுவது, ஒலி எழுப்புவது, சைகை காட்டி பெண்ணின் அந்தரங்கத்துக்குள் அத்து மீறல் : ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம்.

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 3:47 AM

0 Comments:

Post a Comment

<< Home