சத்தியம் மக்கள் சேவை மையம்

Monday, May 19, 2008

தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. மறியல்


இந்திய அரச நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு!
திருச்சி பாரத் மிகுமின் நிலையம் முன் த.தே.பொ.க.  மறியல்
தமிழ் இனத்தின் தற்காப்பு மறியல் போர்
 
நாள் : 20-05-2008, செவ்வாய்
நேரம் : காலை 10.மணி
தலைமை : தோழர் குழ.பால்ராசு
 
தமிழகத்தில் உள்ள இந்திய மிகுமின தொழிற்சாலைகள்(பெல்), தொடர்வண்டித் துறை, துப்பாக்கித் தொழிற்சாலை, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் தூய்மைத் தொழில்கள், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலகம் உள்ளிட்ட பலவற்றில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
 
மேலே குறிப்பிட்ட தொழிலகங்களில் உள்ள உயர் அலுவலர்கள் திட்டமிட்டுத் தமிழர்களை வேலைக்குச் சேர்க்காமல் புறக்கணிக்கின்றனர்.
 
திருச்சி மிகுமின் ஆலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களையும் நிர்வாகப் பிரிவினரையும் வெளி மாநிலத்திலிருந்து வேலைக்குச் சேர்த்து வருகின்றனர்.
 
நிர்வாகப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களைச் சேர்க்கிறார்கள். 2005 முதல் 4 தொகுப்பாக 138 பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொறியியல் கல்லூரிகள் அதிகம். ஆனால் பணியமர்த்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை.
 
தொழிலாளர் பிரிவில் பெல் நிறுவனம் தமிழர்களை மிக மிகக் குறைவாகவே சேர்த்துள்ளது.
 
வேலைக்கு ஆள் எடுப்பது குறித்து பெல் நிறவனத்தில் பணியாளர் கையேடு(Personal Manual)  உள்ளது. அதில் தொகுதி 1 (volume-1),  பிரிவு (A), உட்பிரிவு(a)(Statement  of Recuritment Policy) வேலைக்கு ஆள் சேர்க்கும் கொள்கை பற்றிக் கூறுகிறது. அதில் பயிற்சித் திறனற்றோர் (Unskilled), பாதித்திறனாளர் (Semiskilled), திறனாளர்(Skilled), மேற்பார்வையாளர்(Super visor) ஆகிய தொழில் நிலைப் பிரிவுகளுக்குத் தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெல் அலுவலகர்கள் அவ்வாறு செய்யாமல் நேரடியாக ஆளி் சேர்க்கிறார்கள்.
 
பெல் நிறுவனப் பொது மேலானர்களில் பெரும்பாலோர் வேற்று இனத்தவராக இருப்பதால் தமிழர்களை வேலைக்குச் சேர்க்காமல் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.
 
பல்லாண்டு காலமாக அங்கே பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர், தற்காலிகத் தொழிலாளர் ஆகியோரை முன்னுரிமை அடிப்படையில் நிரந்தரப்படுத்தாமல் வெளிமாநிலத்தவரைப் புதிதாக நிரந்தரப் பணிகளில் சேர்க்கின்றனா.
 
தமிழகமெங்கும் உள்ள தொடர்வண்டித் துறை வேலை வாய்ப்புகளைப் பீகாரிகள் பறித்து வருகின்றனர். அத்துறை அமைச்சர் லல்லு பிரசாத் ஒரு பிகாரி என்பதால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை தராமல் பீகாரிகளைக் கொண்டுவந்து குவிக்கிறார். பொன்மலைப் பணிமனையில் 300 பீகாரிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு இரயில் நிலையங்களில் இந்திக்காரர்களே வேலைகைளைப் பறித்துக் கொண்டுள்ளனர்.
 
திருச்சி அருகே உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையிலும் வெளிமாநிலத்தவர்களே மிகுதியாக வேலை பெற்றுள்ளனர். நரிமணம் பெட்ரோல் ஆலையிலும் வெளியார் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
 
தமிழகம் முழுவதம் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் அயலாரின் ஆதிக்கம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. தனியார் துறை வேலைவாய்ப்பிலும் அயலார் ஆதிக்கம் பெருகி வருகிறது. தமிழக அரசில் பணிபுரியும் இந்திய ஆட்சி(IAS) மற்றும் இந்திய காவல் பணி(IPS) அலுவலர்கள் பெரும்பாலும் வேற்று மாநிலத்தவரே.
 
அயலார் மிகுதியாக  வேலைக்கு வருவதால் ஒரு பக்கம் தமிழர்களின் வேலை வாய்ப்பும் வாழ்வுரிமையும் பறிக்கப்படு்ம். மறுபக்கம் தமிழகத்தில் அயலாரின் குடியிருப்புகள் அதிகரிக்கும்;அவாகளின் மக்கள் தொகை பெருகும். அவாகள் தமிழர்களுக்குப் புறம்பான தங்களின் மொழி மற்றும் பண்பாடுகளைப் பரப்புவர். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே தற்சார்பற்று, பெருமிதம் இழந்து, இரண்டாந்தரக் குடிமக்களாகக் கீழ்நிலை அடைவர்.
 
    ஏற்கெனவே தமிழகத் தொழில், வணிகம் ஆகியவற்றில் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் மேலாதிக்கம் செய்கின்றனர். அவர்கள் கூட்டம் கூட்டமாகத் தமிழகத்தில் வந்து குவிகின்றனர். இந்நிலையில் சென்னையில் தமிழர்களுக்கு வீடு தராமல் பல இந்திக்காரர்களுக்கு மட்டும் வீடு தரக்கூடிய பல வடநாட்டு அடுக்ககங்கள் உள்ளன என்பதை 'தமிழ் ஓசை' நாளிதழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியது. மலையாளிகள் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் சற்றொப்ப மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையினராகப் பெருத்துள்ளனர். தமிழகம் முழுவதுமான பல்வேறு வேலை வாய்ப்புகள், தொழில், வணிகம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மிக விரைவில் தமிழாகள் சிறுபான்மையினராகி அயல் இனத்தவாகள் பெரம்பான்மை ஆகிவிடுவர். தாயகத்தை இழந்துவிடுவர்.
 
இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்தியாவெங்கும் சென்று வசிக்க, தொழில்புரிய ஒருவருக்கு உரிமை உண்டு என்று கூறுவர். ஆனால் அசாம், நாகலாந்து, மராட்டியம் போன்ற மாநிலங்களில் வெளியாரை வெளியேற்றும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. காசுமீரில் வெளி மாநிலத்தவர் சொத்து வாங்க முடியாது. இந்தியாவில் மட்டுமல்லாது பிரிட்டன் பொன்ற அயல்நாடுகளிலும் வெளியார் சிக்கலை எதிர்த்து அம்மண்ணின் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மட்டும் ஏமாளியாக இருக்க வேண்டுமா? தாயகத்தை இழக்க வேண்டுமா? கூடாது. 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதன் நோக்கம் அந்தந்தத் தேசிய இன மக்கள் தங்கள் தாயகத்தில் தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முழுமையாகப் பெற்று முன்னேற வேண்டும் என்பதாகும்.
 
எனவே வெளியார் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நமது போராட்டம் சட்ட விரோதமானதல்ல. வெளியாரை வெளியேற்றப் போராடிய அசாம் மாணவர்களுடன் அன்றையப் பிரதமர் இராசீவ் காந்தி உடன்படிக்கை செய்து கொண்டதையும் நினைவில் கொள்ள வெண்டும்.
 
தமி்ழ்ப் பெருமக்களே! நமது தாயகத்தில் நமது தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவை பறிபோவதைத் தடுக்கும் கொள்கையும் ஆற்றலும் தேர்தல்கட்சிகள் எவற்றுக்குமே இல்லை. அவற்றின் இலக்கு பதவி, பணம், புகழ் என்பவைதாம்.
 
எனவே தற்காப்பு உணர்வுள்ள தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் களத்திற்கு வரவேண்டும். கைகொடுக்க வேண்டும்.
 
நமது கோரிக்கை:
 
  • தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

 

  • தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வாணையம் வழியாக மட்டுமே அந்நிறுவனங்களில் வேலைக்கு ஆள் சேர்க்க வெண்டும்

 

  • தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை அந்நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
திருச்சி மிகுமின் நிலைய வாயிலில் நடக்கும்
அடையாள மறியல் போராட்டத்திற்கு புறப்படுவீர்!
தமிழர்களே வாருங்கள்!
 


Posted By தமிழ்த் தேசியம் to தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி at 5/19/2008 05:37:00 AM
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 5:57 AM 1 comments

Friday, May 2, 2008

சென்னையில் நாளை உண்ணாப்போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை

தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துப் போராடியோரைக்
காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி நாளை
சென்னையில் உண்ணாப்போராட்டம்
 
பெ.மணியரசன் அறிக்கை
 
தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துக் கடந்த 25 மொழிப்போர் நாளன்று சென்னை கோயம்பெடு பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் பேருந்தகளில் தமிழாக்கம கூட இல்லாமல் எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்துக்களைக் கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டத்தைத் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சித் தோழர்கள் நடத்தினர்.
 
    அப்போது கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளா தேன் தமிழ்வளவனும் மற்றம் காவலர்களும் அமைதியாகப் போராட்ட்ததில் ஈடுபட்ட தோழர்களைக் காட்டுமிராண்டித் தனமாகத் தடியால் அடித்துப் படுகாயப்படுத்தினர். ஒரு தோழருக்குக் கை எலும்பு முறிந்தது.
 
        காவல்துறைக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு, அடையாளப்பூர்வமாக ஆங்கில எழுத்துக்களைகட கருப்பு மை பூசி அழித்தத் தோழர்களை சட்டத்திற்கு புறம்பாகத் தடியடி நடத்தியும் இழிவான சொற்களில் திட்டியும் அராஜகம் புரிந்த ஆய்வாளா தேன் தமி்ழ்வளவன் உள்ளிட்டோரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்த்தெசப் பொதுவடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் கடந்த இருமாதங்களுக்கு முன்பேயே உண்ணாப்போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். முதலில் அதற்கு அனுமதி அளித்த காவல்தறை பின்னர் அப்பபோராட்டத்திற்கான அனுமதியை போராட்டம் நடக்கும் தினத்திற்கு முந்தைய நாளில் அவரசக் கடிதம் ஒன்றை அனுப்பி அனுமதி மறுத்தனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் த.தே.பொ.க. வழக்குத் தொடுத்தது. அதன் பயனாக 03-05-3008 சனி காலை 9.00 மண முதல் மாலை 6.00 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாப்போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. உண்ணாப்போராட்டத்திற்கே காவல்துறை அனுமதி மறுத்ததும் அதனை தகர்த்தெறிந்து இப்போராட்டம் நடைபெறுவதாலும் இப்போராட்டம் எழுச்சியடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும்  த.தே.பொ.க.இயக்கத் தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பங்குபெற சென்னை வருகிறார்கள்.
 
        இவ்வுண்ணாப்போட்டத்தைத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு த.வெள்ளையன் அவர்கள் தொடங்கி வைக்கிறார். உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் அவாகள் முடித்து வைக்கிறார். 
 
        ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, இயக்குநர் சீமான், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் கழகத் தலைவர் திர இரா.பாவாணன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மார்க்சியப் பொரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவிஞர் தமிழெந்தி, புலவர் கி.த.பச்சையப்பனார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர். இப்போராட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
 
தோழமையுடன்
தோழர் பெ.மணியரசன்
 பொதுச் செயலாளர்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
 
 
 
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 2:39 AM 0 comments