சத்தியம் மக்கள் சேவை மையம்

Monday, November 12, 2007

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது

வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன்
உள்ளிட்ட 346 பேர் கைது
 
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மன்றோ சிலை அருகே இன்று திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனையடுத்து
 
ஆதரிப்போம் ஆதரிப்போம்
தமிழீழ விடுதலைப் புலிகளை
ஆதரிப்போம் ஆதரிப்போம்
 
வீரவணக்கம் வீரவணக்கம்
தமிழ்ச்செல்வனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்
 
என்பது உள்ளிட்ட முழக்கங்களை வைகோ எழுப்ப தொண்டர்களும் முழக்கமிட்டு ஊர்வலமாக நகர முயற்சித்தனர்.





அப்போது ம.தி.மு.க. நிர்வாகி வேளச்சேரி மணிமாறனை காவல்துறை தாக்கியதாக வைகோ குற்றம்சாட்டி முழக்கமிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து வைகோவிடமிருந்த ஒலிபெருக்கியை காவல்துறை பறித்தனர். அதனால் ஆவேசமடைந்த வைகோ, ஒலிபெருக்கியை பிடுங்கிய உங்களால் என் தொண்டையை பிடுங்க முடியுமா? என்று காவல்துறையினரிடம் கூறி ஒலிபெருக்கி இல்லாமல் முழக்கமிட்டார்.





அதன் பின்னர் வைகோ, பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் மணியரசன், ஓவியர் வீரசந்தானம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் மாலை 5:20 மணியளவில் கைது செய்தனர்.
 
அப்போது, இந்திய மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக காவல்துறையைக் கண்டித்தும் வைகோ முழக்கங்களை எழுப்ப திரண்டிருந்தோரும் உரத்த குரலில் அந்த முழக்கங்களை எழுப்பினர்.





மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, கவிஞர் இன்குலாப் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

14 பெண்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 346 பேரும் இன்று இரவு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 7:58 PM 1 comments

Tuesday, November 6, 2007

பிரிசேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கக் கவிதை

புறநானூற்று வீரத்தை
எழுத்துக்களாகவே  
பார்த்த நமக்கு
"இது தான் அது"வென
இடிததுரைத்தது
புலிகள் இயக்கம்..
 
தமிழனின் சீற்றத்தால்
சிதறி ஓடிய சிங்களம்
தனக்கே உரிய
கோழைத்தனத்தை
கொலை செய்து
காட்டிவிட்டது...
 
சமாதானத்தின் மீது
நாளும் நம்பிக்கை
வைத்து
பேச்சினை நம்பியவரின்
மூச்சையே நிறுத்திவிட்டது..
 
மாறா புன்னகையுடனும்
மாசற்ற மனதுடனும்
வீரனாய் வாழ்ந்த
நம் செல்வனை
இழந்து விட்டோம்..
 
ஆறாக் காயங்களை
தாங்கிநிற்கும் மண்ணில்
வேறாய் ஓடுகின்ற
லட்சிய வேட்கைக்கு
வீரனே உம்மை
உரமிட்டோம்..
 
கண்களில் நீர்ததும்ப
கனல்களால் நெஞ்சம்
வெதும்ப,
உன்முகம் லட்சியத்தை
அடைந்திட சொல்கிறது..
 
"இந்தி்"யத் தமிழனாக
ஏதும் செய்திட இயலாமல் 
நிற்கும எம்மை,
வெட்கம் கொல்கிறது..
 
எத்தனை
துயர் வந்தாலும்
எத்ததனை
தடை வந்தாலும்
அத்தனையும் உடைந்திட
தமிழ்ஈழம் 
நிச்சயம் எழும்..
 
பித்தனை போலவே
பிறழ்ந்து திரியும்
அரசியல்வாதிகளின்
போலி முகங்களில்
முத்திரை பதிக்கும்
அடி விழும்..
 
மரணத்தை எண்ணி
மனம் நோவதைவிட
இனம் காக்க எழுந்தால்,
வரலாறு நம்மை
வரவேற்கும்..
 
நிச்சயமாய் பிறக்க போகும்
ஈழத்தின் வாசலிலே
தமிழ்ச்செல்வனின்
புன்னகையும்
அன்போடு அதை
அலங்கரிக்கும்..
 
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு
எங்கள் வீரவணக்கம் !
 
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:24 PM 0 comments